Wednesday, August 27, 2008

உலகின் மிகப்பெரிய லூப்ரிகன்ட் கம்பெனியாக ஷெல் தேர்வு

இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் ஆயில் ( லூப்ரிகன்ட்ஸ் ) சப்ளை செய்வதில் உலக அளவில் மிகப்பெரிய கம்பெனியாக அமெரிக்காவின் ஷெல் நிறுவனம் இருப்பது தெரியவந்திருக்கிறது. கிளின் அண்ட் கம்பெனி எடுத்த ஆய்வில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. 2007ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஷெல் நிறுவனத்திற்கு உலக அளவில் லூப்ரிகன்ட்ஸ் மார்க்கெட்டில் 13 சதவீத மார்க்கெட் ஷேர் இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் கம்பெனியை விட, ஷெல்லுக்கு 2 சதவீதம் மட்டுமே அதிக மார்க்கெட் ஷேர் இருக்கிறது. வருடாவருடம் அதன் விற்பனை 10 சதவீதம் அதிகரித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. வட அமெரிக்காவில் லூப்ரிகன்ட்ஸ்கான தேவை அதிகமாக இருந்தாலும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள விற்பனையில் ஷெல் நிறுவனம் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இப்போது உற்பத்திக்கான செலவு அதிகரித்திருந்தாலும் நாங்கள் ஒருபோதும் லூப்ரிகன்ட்ஸின் தரத்தில் குறைவு வைப்பதே இல்லை. எங்கள் தயாரிப்பு மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்றுமே வீண்போகாது. இந்தியாவில் எங்கள் தயாரிப்புகள், பணத்திற்கேற்ற மதிப்பை கொண்டிருக்கும் என்று ஷெல் லூப்ரிகன்ட்ஸ் இந்தியாவின் தலைவர் டொலால்ட் ஆண்டர்சன் தெரிவித்தார். மேற்று ஐரோப்பிய நாடுகளில் லூப்ரிகன்ட்ஸ்கான தேவை குறைந்திருந்தாலும் ஷெல், அதன் மார்க்கெட் ஷேரை தக்க வைத்திருக்கிறது. அமெரிக்காவில் அதற்கு 12 சதவீத மார்க்கெட் ஷேர் இருக்கிறது. இந்தியாவில் லூப்ரிகன்ட்ஸின் விற்பனை அளவு வருடத்திற்கு 8 சதவீதம் வீதம் அதிகரிக்கிறது. சீனாவில் அது 20 சதவீதமாகவும் இந்தோனேஷியாவில் 14 சதவீதமாகவும் இருக்கிறது.
நன்றி :தினமலர்


சரிவில் முடிந்தது இன்றைய பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே சென்செக்ஸ் குறைந்து தான் இருந்தது. இதேநிலை நீடித்து மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 185.43 புள்ளிகள் ( 1.28 சதவீதம் ) குறைந்து 14,296.79 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 45.40 புள்ளிகள் ( 1.05 சதவீதம் ) குறைந்து 4,292.10 புள்ளிகளில் முடிந்தது. ஆசிய பங்கு சந்தைகளில் இன்று ஏற்றமும் இறக்கமுமாக இருந்தாலும் ஐரோப்பிய சந்தை சரிவில்தான் முடிந்துள்ளது.
நன்றி :தினமலர்


டெய்ச்சி - ரான்பாக்ஸி ஒப்பந்தத்திற்கு எஃப் ஐ பி பி ஒப்புதல்

இந்தியாவின் பிரபல பார்மாசூடிகல் கம்பெனியான ரான்பாக்ஸியின் 20 சதவீத பங்குகளை கூடுதலாக வாங்க ஜப்பானின் டெய்ச்சி சான்கியோ முன்வந்தது. இதற்காக வெளிநாட்டு பணம் ரூ.21,560 கோடி இந்தியாவுக்குள் வர இருப்பதால், அதற்கு ஃபாரின் இன்வெஸ்ட்மென்ட் புரமோஷன் போர்டிடம் ( எஃப்.ஐ.பி.பி.,) அனுமதி பெற வேண்டும். இந்த ஒப்பந்தத்திற்கு இப்போது எஃப்.ஐ.பி.பி., அனுமதி அளித்து விட்டது. மேலும் இப்போது இந்த விவகாரம் மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரத்துறையினரின் ஒப்பந்தத்திற்காக சென்றிருக்கிறது. ஏனென்றால் ரூ.600 கோடிக்கும் மேல் வெளிநாட்டு பணம் இங்கு வருகிறது என்றால் அவர்களின் ஒப்புதலை பெற வேண்டும். இவர்களது ஒப்புதல் எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை என்றாலும், ரான்பாக்ஸியின் 20 சதவீத பங்குகளை வாங்குவதற்கான ஓப்பன் ஆஃபர் ஆகஸ்ட் 16ம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் 4ம் தேதி முடிகிறது. மத்திய அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் நாங்கள் பங்குகளை வாங்கும் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம் என்று டெய்ச்சி நிறுவன உயர் அதிகாரிகம் தெரிவித்தரனர்.
நன்றி : தினமலர்


புயல் தாக்கும் அபாயத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது

கச்சா எண்ணெய் விலை ஏதாவது ஒரு காரணத்திற்காக உயரும் அல்லது குறையும். இப்போது அமெரிக்காவில் உள்ள மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் குஸ்டவ் என்ற புயல் தாக்கும் அபாயம் இருப்பதாக வந்த தகவலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது. மெக்ஸிகோ வளைகுடா பகுதியில்தான் அமெரிக்காவின் பிரபல எண்ணெய் கிணறுகள் பல இருக்கின்றன. ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற ஜார்ஜியா விவகாரத்தில் ரஷ்யாவுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையே கருத்து மோதல் நடந்து வருவதாலும் கச்சா எண்ணெய் விலை உயர்வதாக சொல்கிறார்கள். நியுயார்க் சந்தையில் நேற்று அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை ( அக்டோபர் டெலிவரிக்கானது ) பேரலுக்கு 67 சென்ட் உயர்ந்து 116.94 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 23 சென்ட் உயர்ந்து 114.86 டாலராக இருந்தது.
நன்றி : தினமலர்


இந்திய நகைகள் ஏற்றுமதி அமெரிக்காவில் சரிவு

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய நிறுவனங்களின் தங்க நகைகள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.பல நாடுகளுக்கு தங்க நகை ஏற்றுமதி செய்யப்பட்டாலும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கணிசமான அளவில் வர்த்தகம் நடந்து வந்தது. ஆனால், சமீப காலமாக இந்த நாடுகளில் பொருளாதார சரிவு ஏற்பட்டு வருவதை அடுத்து, வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் சஞ்சய் கோத்தாரி கூறுகையில், 'கடந்தாண்டை விட, கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களில் தங்க நகைகள் ஏற்றுமதி 23 சதவீதம் குறைந்துள்ளது. அதனால், ரஷ்யா, சீனா, மேற்காசிய சந்தைகளில் தங்க நகை ஏற்றுமதி செய்வது தொடர்பாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.'தங்க நகைகள் ஏற்றுமதிக்குரிய பட்டியலில் நகைகளை மட்டும் மத்திய அரசு சேர்த்துள்ளது. தங்கம், விலை உயர்ந்த கற்கள் பதித்த ஆடைகள், புடவைகள், கைக்கடிகாரங்கள் உட்பட பல்வேறு பொருட்களையும் இந்த ஏற்றுமதி பட்டியலில் சேர்க்க வேண்டும். அப்போது தான், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இந்த பொருட்களை தயாரித்து, ஏற்றுமதி செய்ய வழி கிடைக்கும். மத்திய வர்த்தக அமைச்சகம் தான் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ஏற்றுமதியாளர்கள் கூறினர்.'இந்தியாவில் தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் தொடர்பான தொழிலில் 30 லட்சம் பேர் வேலையில் உள்ளனர். இந்த துறையை விரிவுபடுத்தினால், இன்னும் 30 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். ஏற்றுமதியும் அதிகரிக்கும்' என்றும் இவர்கள் கருதுகின்றனர்.
நன்றி : தினமலர்