Wednesday, August 27, 2008

புயல் தாக்கும் அபாயத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது

கச்சா எண்ணெய் விலை ஏதாவது ஒரு காரணத்திற்காக உயரும் அல்லது குறையும். இப்போது அமெரிக்காவில் உள்ள மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் குஸ்டவ் என்ற புயல் தாக்கும் அபாயம் இருப்பதாக வந்த தகவலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது. மெக்ஸிகோ வளைகுடா பகுதியில்தான் அமெரிக்காவின் பிரபல எண்ணெய் கிணறுகள் பல இருக்கின்றன. ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற ஜார்ஜியா விவகாரத்தில் ரஷ்யாவுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையே கருத்து மோதல் நடந்து வருவதாலும் கச்சா எண்ணெய் விலை உயர்வதாக சொல்கிறார்கள். நியுயார்க் சந்தையில் நேற்று அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை ( அக்டோபர் டெலிவரிக்கானது ) பேரலுக்கு 67 சென்ட் உயர்ந்து 116.94 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 23 சென்ட் உயர்ந்து 114.86 டாலராக இருந்தது.
நன்றி : தினமலர்


No comments: