கிங் பிஷர் விமான நிறுவனம், தனது பயிற்சி பைலட்டுகளுக்கான சம்பளத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.விமான எரிபொருள் விலை உயர்வால் விமான நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. விமான போக்குவரத்து கட் டணங்கள் அதிகரிக்கப் பட்டதால், பல்வேறு வழித்தடங்களுக்கு செல்லும் விமானங்கள் பயணிகள் இன்றி காத்தாடத் துவங்கியுள்ளன. இந்நிறுவனங்கள், எண் ணெய் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பாக் கியை குறிப்பிட்ட காலம் முடிந்தும் இன்னும் பாக்கி வைத்துள்ளன. இதன் காரணமாக, விமான நிறுவனங்கள் சிக்கன நடவடிக் கைகளை துவங்கியுள்ளன. இதன் ஒரு கட்டமாக, விஜய் மல்லய்யாவின் கிங் பிஷர் நிறுவனமும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் அதிரடியாக ஒன்றிணைந்தன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது தற்காலிக ஊழியர்களை அதிரடியாக நீக்கியது. இந்த விவகாரம் சர்ச் சையை ஏற்படுத்தியதை அடுத்து, ஊழியர்கள் மீண் டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அடுத்த கட்டமாக, கிங் பிஷர் நிறுவனம் தனது நிறுவனத்தில் பயிற்சி பைலட் டுகளாக பணிபுரியும் துணை பைலட்டுகள் 50 பேரின் சம்பளத்தை அதிரடியாக குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால், பயிற்சி பைலட்டுகள் கவலையில் ஆழ்ந் துள்ளனர். அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,'சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. எந்த அள விற்கு சம்பள குறைவு இருக்கும் என்பது பற்றி தற்போது கூற முடியாது' என்றார். பயிற்சி பைலட் ஒருவர் கூறுகையில்,'தற்போது ரூ.20 ஆயிரம் சம்பளமாக தரப்படுகிறது. இதையும் குறைத்தால் என்ன செய்வது. 'கால் சென்டர்களில்' இதை விட அதிகம் சம்பளம் தரப்படுகிறது' என்றார்.
நன்றி : தினமலர்







