Sunday, October 25, 2009

செலவை குறைக்க ஏர் – இந்தியா அதிரடி : கேன்டீனில் இனி அசைவம் இல்லை

செலவை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஏர் – இந்தியா விமான நிறுவன கேன்டீனில் இனிமேல் முழுக்க, முழுக்க சைவ உணவுகளை மட்டுமே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார மந்த நிலை, ஏர் – இந்தியா விமான நிறுவனத்தையும் விட்டு வைக்கவில்லை. கடும் நஷ்டத்தில் அந்த நிறுவனம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஏர் – இந்தியா ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட முடியாத நிலை, கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்பட்டது. இதன்காரணமாக, செலவுகளை குறைக்கும் வகையில், பல்வேறு அதிரடி சிக்கன நடவடிக்கைகளை ஏர் இந்தியா நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, விமான நிறுவன ஊழியர்களின் கேன்டீன்களிலும் சில சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. டில்லி விமான நிலையத்தில் செயல்படும் கேன்டீனில் மட்டும், தினமும் 700 முதல் 1,100 ஊழியர்கள் வரை சாப்பிடுகின்றனர். ஊழியர்களுக்காக உணவுகள் குறைந்த விலையில் கேன்டீனில் விற் பனை செய்யப்படுகிறது. ஒரு வெஜிடேரியன் 'தாளி'யின் விலை ரூ.2.50க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக மாதம் தோறும் 20 லட்ச ரூபாயை ஏர் – இந்தியா செலவிடுகிறது. ஆனால், மிக குறைந்த அளவு தான் வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக, அதிக விலை கொடுத்து சிக்கன் வாங்கி, அவற்றை சமைத்து விற்பனை செய்வதற்கு அதிகமாக செலவாகிறது. அவற்றை மானிய விலையில் விற்பனை செய்வதால், வருவாய் அந்த அளவுக்கு கிடைப் பது இல்லை. இதுபோன்ற அதிகப்படியான செலவுகளை குறைக்கும் வகையில், கேன்டீனில் இனிமேல் அசைவ உணவுகள் தயாரிப்பதை கைவிடுவது என, ஏர் இந்தியா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், மாதத் துக்கு மூன்று லட்ச ரூபாய் வரை சேமிக்க முடியும் என, ஏர் இந்தியா நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

நன்றி : தினமலர்