Monday, November 24, 2008

கோயம்புத்தூரில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் மற்றும் ஆர் அண்ட் டி சென்டர் அமைக்கிறது சவ்வியான்

பிசினஸ் பிராசஸிங் மேனேஜ்மென்ட் ( பிபிஎம் ) நிறுவனமான சவ்வியான், கோயம்புத்தூரில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் மற்றும் ஆர் அண்ட் டி மையத்தை அமைக்கிறது.இந்தியாவில் மும்பைக்கு அடுத்ததாக கோயம்புத்தூரில்தான் இம்மாதிரியான மையம் அமைக்கப்படுகிறது. ஒரு நிறுவனத்திற்கு தேவையான எல்லா வகையான சாப்ட்வேரையும் டிசைன் செய்து உருவாக்க, மற்றும் அது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் ஈடுபட அது கூடுதலான பணத்தை முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது. இந்த துறையில் இந்தியாவில் ஒரு முன்னணி நிறுவனமாக வளர அது முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் சிலிக்கான்வேலி, மற்றும் மும்பையில் இருக்கும் அதன் நிறுவனங்களுக்கு கோயம்புத்தூரில் இருந்து ஒரு உயர்மட்ட குழுவினர் சென்று இது குறித்து அறிந்து வர இருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்


அமெரிக்க பங்கு சந்தை வீழச்சியால் இந்திய கம்பெனிகள் இழந்தது 5.74 பில்லியன் டாலர்கள்

போன வாரத்தில் அமெரிக்க சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. அங்கு நிலவும் மோசமான பொருளாதார சூழ்நிலையால் அங்குள்ள பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன. அங்குள்ள பங்கு சந்தைகளில் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும் பெரும்பாலான கம்பெனிகளில் பங்கு மதிப்பு பாதாளத்திற்கு சென்று விட்டன. இதில் இந்திய கம்பெனிகளும் தப்பவில்லை. அங்குள்ள நியுயார்க் ஸ்டாக் எக்சேஞ் மற்றும் நாஸ்டாக்கில் 18 இந்திய கம்பெனிகள் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கின்றன. நவம்பர் 21 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் அங்கு லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும் 18 இந்திய கம்பெனிகளில் 16 கம்பெனிகள் மொத்தமாக 5.74 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள மார்க்கெட் கேப்பிடலைஷேசனை இழந்திருக்கின்றன. இரண்டு கம்பெனிகளின் மதிப்பு மட்டுமே உயர்ந்திருக்கிறது. டாக்டர் ரெட்டி'ஸ் லேபரட்டரீஸ் 37 மில்லியன் டாலர்களும், ஜென்பேக்ட் 4.3 மில்லியன் டாலர்களும் உயர்ந்திருக்கின்றன. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்காவின் பொருளாதாரம் இப்போது மோசமான நிலைக்கு சென்று விட்டது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. இதனால்தான் அங்குள்ள பங்கு சந்தைகள் தொடர்ந்து சரிவை வருகின்றன. நஷ்டமடைந்த 16 இந்திய கம்பெனிகளில் அதிகம் நஷ்டமடைந்தது ஹெச்.டி.எப்.சி.பேங்க் தான். அது மட்டுமே 1.37 பில்லியன் டாலர்கள் மார்க்கெட் கேப்பிடலைஷேசனை இழந்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ஐசிஐசிஐ பேங்க் 1.12 பில்லியன் டாலர்களை இழந்திருக்கிறது. இன்போசிஸ் ஒரு மில்லியன் டாலர்கள், விப்ரோ 863 மில்லியன் டாலர்கள், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் 457 மில்லியன் டாலர்கள் மார்க்கெட் கேபிடலைசேஷனை இழந்திருக்கின்றன. இது தவிர டாடா மோட்டார்ஸ், டாடா டெலிகம்யூனிகேஷன்ஸ், ஷிபி டெக்னாலஜிஸ், ரிடிஃப் டாட் காம், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், எம்.டி.எல்.எல்., பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் ஆகியவையும் பெருமளவு மார்க்கெட் கேபிடலைஷேசனை இழந்திருக்கின்றன.
நன்றி : தினமலர்


சிட்டி பேங்க்கை காப்பாற்ற, அதற்கு 320 பில்லியன் டாலர் கடன் கொடுக்க அமெரிக்க அரசு ஒப்புதல்

கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான சிட்டி குரூப்பை காப்பாற்ற, அதன் 300 பில்லியன் டாலர் வராக்கடன்களை ஏற்றுக்கொள்ள அமெரிக்க அரசு முன்வந்துள்ளது. மோசமான கடன் என்று அக்கவுன்ட் புக்கிலேயே நீண்ட காலமாக இருந்து கொண்டிருக்கும் 300 பில்லியன் டாலர் ( சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் ) கடனை அமெரிக்க அரசு ஏற்றுக்கொள்வதாக ஓத்துக்கொண்டிருக்கிறது. இது தவிர மேலும் ஒரு 20 பில்லியன் டாலர்களை ( சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் ) சிட்டி குரூப்பின் முதலீட்டிற்கு கடனாக கொடுக்கவும் அமெரிக்க நிதித்துறை ஒத்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்க நிதித்துறை, ஃபெடரல் ரிசர்வ் வங்கி, ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆகியவற்றுடன் நேற்று சிட்டி குரூப் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. முதலீட்டிற்காக கொடுக்கப்படும் 20 பில்லியன் டாலருக்கு அமெரிக்க நிதித்துறை, கொஞ்சம் அதிக வட்டியை, அதாவது 8 சதவீத வட்டியை சில வருடங்களுக்கு வசூல் செய்யும் என்றும் பேசப்பட்டிருக்கிறது. சிட்டி குரூப்பிடமிருந்து 8 சதவீத வட்டியை வசூலிப்பது போலவே, அமெரிக்க நிதித்துறை மற்ற வங்கிகளுக்கு கடந்த மாதத்தில் கொடுத்திருந்த 700 பில்லியன் டாலர் கடனுக்கும் 8 சதவீத வட்டியை வசூலிக்கவும் முடிவு செய்திருக்கிறது. இது தவிர சிட்டி குரூப்பின் நிர்வாகத்தில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை என்றும் பெடரல் ரிசர்வ் வங்கி சொல்லிவிட்டது. 106 நாடுகளில் கிளைகளை கொண்டுள்ள சிட்டி குரூப்பிற்கு 20 கோடி கஸ்டமர்கள் இருக்கிறார்கள். மோசமான நிதி நிலையில் இருந்த அந்த பேங்க்கின் பங்கு மதிப்பு வேகமாக குறைந்து கொண்டே வந்தததை அடுத்து, திவால் ஆகி விடுமோ என்ற அச்சம் அதன் முதலீட்டாளர்கள் மற்றும் கஸ்டமர்களிடையே கடந்த சில நாட்களாக இருந்து வந்தது.
நன்றி : தினமலர்


ஜெட் ஏர்வேஸின் சம்பள குறைப்பிற்கு பைலட்கள் கடும் எதிர்ப்பு

கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக சொல்லப்படும் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், அதன் ஊழியர்களில் சம்பளத்தை குறைக்க முடிவு செய்தது. இதற்கு அதில் பணியாற்றி வரும் இந்திய பைலட்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு பைலட்களை இங்கிருந்து முழுமையாக வெளியேற்றும் வரை நாங்கள் சம்பள குறைப்பை ஒத்துக்கொள்ள முடியாது என்று அவர்கள் திட்டவட்டமாக சொல்லி விட்டனர். கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ், அதன் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் திட்டத்துடன், நேற்று சேர்மன் நரேஷ் கோயல் தலைமையில் ஊழியர்களின் கூட்டத்தை மும்பை ரமதா ஹோட்டலில் நடத்தியது. இதில் அதன் ஊழியர்களின் சம்பளத்தை, 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மாதம் ரூ.75,000 முதல் ரூ.2,00,000 வரை சம்பளம் பெறுபவர்களுக்கு 5 சதவீதம் சம்பளத்தை குறைப்பது என்றும், ரூ.2 - 5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு 10 சதவீதமும், ரூ.5 - 10 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும், அதை விட அதிகம் சம்பளம் பெறும் உயர் அதிகாரிகளுக்கு 25 சதவீதமும் சம்பளத்தை குறைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதனை அதன் ஊழியர்களும் ஒத்துக்கொண்டனர். ஆனால் அதன் பைலட்களுக்கும் 20 சதவீதம் வரை சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற நிர்வாகத்தின் முடிவுற்கு இந்திய பைலட்கள் ஒத்துக்கொள்ளவில்லை. காரணம் அந்த நிறுவனத்தில் 750 இந்திய பைலட்களும் 240 வெளிநாட்டு பைலட்களும் பணியாற்றுகிறார்கள். இதில் வெளிநாட்டு பைலட்களுக்கோ, இந்திய பைலட்களை விட 50 சதவீதம் கூடுதலாக சம்பளம் கொடுக்கப்படுகிறது. இது தவிர வேறு பல சலுகைகளும் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஜெட் ஏர்வேஸிடம் இருக்கும் பெரிய விமானங்களை ஓட்டுவதும் அவர்கள்தான். இந்திய பைலட்கள் சிறிய விமானங்களைத்தான் ஓட்டுகிறார்கள். இதனால் இரு தரப்பினருக்குமிடையே கடும் பணிப்போர் நடந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம், வெளிநாட்டு பைலட்கள் 27 பேரை வேலையில் இருந்து நீக்கியது. இருந்தாலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் எல்லா வெளிநாட்டு பைலட்களையும் நீக்கி விட வேண்டும் என்று இந்திய பைலட்கள் கோரி வருகிறார்கள். எல்லா வெளிநாட்டு பைலட்களையும் நீக்கியபின்தான் நாங்கள் சம்பள குறைப்பு பற்றி முடிவு செய்யவோம் என்றும் அவர்கள் சொல்லி விட்டனர். நிர்வாக செலவு கூடி விட்டதாலும், பயணிகள் எண்ணிக்கை குறைந்து விட்டதாலும் இந்த நிதிஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஜெட் ஏர்வேஸ், ரூ384.53 கோடி நஷ்டமடைந்திருக்கிறது. இதன் காரணமாக அதன் ஊழியர்களில் 1,000 பேரை நீக்கிய ஜெட் ஏர்வேஸ்,பின்னர் அரசியல் நெருக்கடி காரணமாக இரண்டே நாளில் மீண்டும் வேலையில் சேர்த்துக்கொண்டது நினைவிருக்கலாம்.
நன்றி : தினமலர்


நிப்டி உயர்ந்தும் சென்செக்ஸ் குறைந்தும் முடிந்த பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தை இன்று தள்ளாடியபடியே இருந்தது. அதிகம் உயராமலும் அதிகம் குறையாமலும் இருந்த பங்கு சந்தையில், வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 12.09 புள்ளிகள் மட்டும் ( 0.14 சதவீதம் ) குறைந்து 8,903.12 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 14.80 புள்ளிகள் மட்டும் ( 0.55 சதவீதம் ) உயர்ந்து 2,708.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. நிப்டி 2,700 புள்ளிகளை எட்ட பல முறை முயன்று, பின்னர் 2,700 புள்ளிகளுக்கு மேலேயே நிலை கொண்டு முடிந்திருக்கிறது. இன்று சர்வதேச அளவில் பங்கு சந்தைகள் அப்படியும் இப்படியுமாக இருந்தது. ஆசிய பங்கு சந்தைகள் குறைந்து முடிந்திருந்தாலும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகள் உயர்ந்து இருந்தன. சத்யம், ஐசிஐசிஐ பேங்க், டி.எல்.எஃப், எம் அண்ட் எம், எஸ்.பி.ஐ.,யுனிடெக், சுஸ்லான் எனர்ஜி,டாடா கம்யூனிகேஷன் ஆகியவை 3 - 9 சதவீதம் குறைந்திருந்தன. ரிலையன்ஸ் இன்ப்ஃரா, மாருதி சுசுகி, டாடா பவர், டி.சி.எஸ்., பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் பவர், கெய்ல், நால்கோ, ஐடியா செல்லுலார், ஹெச்.சி.எல்.டெக்., ஆகியவை 2.5 - 6 சதவீதம் உயர்ந்திருந்தன.
நன்றி : தினமலர்


மியூச்சுவல் பண்டில் 58 ஆயிரம் கோடி போச்சு!

சர்வதேச நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பங்குச் சந்தையில், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு மட்டும் 58 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் வருமான இழப்பு ஏற்பட்டதை அடுத்து, பலரும் போட்ட பணத்தை திரும்பப்பெறும் நிலை ஏற்பட்டது. இதனால், திட்டமிட்டு அமல் செய்யப்பட்ட குறுகிய கால மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் இருந்து பலரும் பணத்தை திரும்பப்பெறுவது அதிகரித்தது. முதிர்ச்சி பெறாமலேயே பலரும் பணத்தை திரும் பப் பெற முடிவு செய்ததால், நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
குறிப்பிட்ட காலம் வரை டிபாசிட் பணத்தை வைத்திருந்தால் தான் அதற்கு லாபம் தர முடியும். ஆனால், முதிர்ச்சி பெறாமலேயே போட்ட பணத்தை திரும்பப்பெற முடிவு செய்ததால், மியூச்சுவல் பண்ட் நிதியை அவசர அவசரமாக திரட்டி திரும்பத் தர வேண்டிய நிலை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.நிதி நெருக்கடியால், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு முதலீட்டு பணம் மொத்தம் 58 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 'பிக்சட் மெச்சூரிட்டி பிளான்' கள் உட்பட, குறுகிய கால மியூச்சுவல் மெச்சூரிட்டி திட்டங்களில் இருந்து மட்டும் 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.ஐ.சி.ஐ.சி.ஐ., ப்ரூடென்ஷியல் உட்பட பல நிறுவனங்களுக்கும் இந்த வகையில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பொது மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், நிதி ஆதாரத்தை திரட்டி காட்ட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.இது குறித்து மியூச்சுவல் பண்ட் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 'அரையாண்டு, ஓராண்டு மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் உள்ளன. அவற்றில் இருந்து பணத்தை திரும்பப்பெறுவது, நிறுவனங்கள் தந்த உத்தரவாதத்தை மீறிய செயலாகிறது. இப்படி செய்யும் போது, நிறுவனத்துக்கு தான் அதிக இழப்பு ஏற்படுகிறது.பணத்தை திரும்பப்பெற வேண்டாம் என்று நாங்கள் வாடிக்கையாளர்களை தடுத்து வருகிறோம்; அதே சமயம், தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையூட்டவும் செய்து வருகிறோம்' என்று தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்


வெளிநாட்டு பிராண்டில் 'லோக்கல் சரக்கு'க்கு தடை

வெளிநாட்டு பிராண்டு பெயரைப் போலவே உள்ளூர் சரக்கு தயாரித்து, பொது மக்களிடம் தவறான தோற்றத்தை ஏற்படுத்தி விற்பனை செய்வதற்கு, டில்லி ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
டில்லியைச் சேர்ந்த ரிசோம் டிஸ்டிலரிஸ் என்ற மதுபான தயாரிப்பு நிறுவனம், 'இம்பீரியல் புளூ' மற்றும் 'ராயல் ஸ்டேக்' ஆகிய விஸ்கி ரகங்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்தது.
பிரான்ஸ் கம்பெனியின் விஸ்கி பாட்டிலில், மேல் பகுதியில் 'ராயல் ஸ்டேக்' என்றும் கீழ்பகுதியில் 'ஸீகிராம்' என்றும் முத்திரையிடப்பட்டிருக்கும். அந்த காலி பாட்டில்களையும் பயன்படுத்தி, உள்ளூர் சரக்கை நிரப்பியும் விற்பனை செய்தது இந்த நிறுவனம்.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் ரிச்சர்டு என்ற மதுபான தயாரிப்பு நிறுவனமும், அதன் 'ஸீகிராம்' என்ற இந்திய துணை நிறுவனமும் சேர்ந்து, டில்லி ஐகோர்ட்டில் இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்து மனு செய்தன.
மனுவை விசாரித்த நீதிபதி ரிவா கெட்ராபால், இரண்டு நிறுவனங்களின் மதுபானப் பாட்டில்களைப் பார்த்து, அது தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்து பின்னர் தீர்ப்பளித்தார்.அவர் தீர்ப்பளிக்கையில், 'இம்பீரியல் கோல்டு என்ற பெயரில் பிரான்ஸ் நிறுவன பிராண்டு உள்ளது. அதுபோல, இம்பீரியல் புளூ, இம்பீரியல் ரெட் ஆகிய பெயர்களிலும் அந்த நிறுவனம் பிராண்டு பெயர்களை பதிவு செய்து, விஸ்கியை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்த பெயர் தொணிக்கும் வகையில், இம்பீரியல் என்பதை சேர்த்து பிராண்டில் மற்ற மதுபானத்தை விட, விஸ்கியை தயாரித்தது சட்டப்படி தவறு; இது மருத்துவ ரீதியாக உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது. இதை அனுமதிக்க முடியாது. அதனால், இந்த பெயர்களில் மது தயாரிப்பதை நிறுத்த உத்தரவிடப்படுகிறது' என்றார்.
'இம்பீரியல், ராயல் என்பதெல்லாம் பொதுவான பெயர்கள் தான். அவற்றை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்' என்று டில்லி மதுபான தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நீதிபதி, 'இந்த இரண்டு பெயர்களும் பொதுமான பெயர்கள் தான்.
மற்ற பொருட்களுக்கு வைத்தாலும், மதுவுக்கு, அதிலும் குறிப்பாக விஸ்கிக்கு வைப்பது சட்டப்படி அனுமதிக்கப்பட முடியாது.பிரான்ஸ் கம்பெனியின் காலி பாட்டில்களைப் பயன்படுத்தி, அதில் உள்ளூர் சரக்கை ஊற்றி விற்பதும் சரியல்ல' என்று தெளிவுபடுத்தினார்.
நன்றி : தினமலர்