Monday, November 24, 2008

கோயம்புத்தூரில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் மற்றும் ஆர் அண்ட் டி சென்டர் அமைக்கிறது சவ்வியான்

பிசினஸ் பிராசஸிங் மேனேஜ்மென்ட் ( பிபிஎம் ) நிறுவனமான சவ்வியான், கோயம்புத்தூரில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் மற்றும் ஆர் அண்ட் டி மையத்தை அமைக்கிறது.இந்தியாவில் மும்பைக்கு அடுத்ததாக கோயம்புத்தூரில்தான் இம்மாதிரியான மையம் அமைக்கப்படுகிறது. ஒரு நிறுவனத்திற்கு தேவையான எல்லா வகையான சாப்ட்வேரையும் டிசைன் செய்து உருவாக்க, மற்றும் அது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் ஈடுபட அது கூடுதலான பணத்தை முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது. இந்த துறையில் இந்தியாவில் ஒரு முன்னணி நிறுவனமாக வளர அது முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் சிலிக்கான்வேலி, மற்றும் மும்பையில் இருக்கும் அதன் நிறுவனங்களுக்கு கோயம்புத்தூரில் இருந்து ஒரு உயர்மட்ட குழுவினர் சென்று இது குறித்து அறிந்து வர இருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்


No comments: