Monday, November 24, 2008

நிப்டி உயர்ந்தும் சென்செக்ஸ் குறைந்தும் முடிந்த பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தை இன்று தள்ளாடியபடியே இருந்தது. அதிகம் உயராமலும் அதிகம் குறையாமலும் இருந்த பங்கு சந்தையில், வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 12.09 புள்ளிகள் மட்டும் ( 0.14 சதவீதம் ) குறைந்து 8,903.12 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 14.80 புள்ளிகள் மட்டும் ( 0.55 சதவீதம் ) உயர்ந்து 2,708.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. நிப்டி 2,700 புள்ளிகளை எட்ட பல முறை முயன்று, பின்னர் 2,700 புள்ளிகளுக்கு மேலேயே நிலை கொண்டு முடிந்திருக்கிறது. இன்று சர்வதேச அளவில் பங்கு சந்தைகள் அப்படியும் இப்படியுமாக இருந்தது. ஆசிய பங்கு சந்தைகள் குறைந்து முடிந்திருந்தாலும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகள் உயர்ந்து இருந்தன. சத்யம், ஐசிஐசிஐ பேங்க், டி.எல்.எஃப், எம் அண்ட் எம், எஸ்.பி.ஐ.,யுனிடெக், சுஸ்லான் எனர்ஜி,டாடா கம்யூனிகேஷன் ஆகியவை 3 - 9 சதவீதம் குறைந்திருந்தன. ரிலையன்ஸ் இன்ப்ஃரா, மாருதி சுசுகி, டாடா பவர், டி.சி.எஸ்., பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் பவர், கெய்ல், நால்கோ, ஐடியா செல்லுலார், ஹெச்.சி.எல்.டெக்., ஆகியவை 2.5 - 6 சதவீதம் உயர்ந்திருந்தன.
நன்றி : தினமலர்


No comments: