Saturday, December 12, 2009

வாய்​மூடி மெüனி​க​ளாக...

கட​லை​வி​டப் பெரிது "கருணை' மனம் ​ என்​பர்.​ இந்த அவ​சர உல​கில் சுய​ந​லம்,​​ லாப நோக்கு,​​ நமக்​கென்ன வந்​தது என்ற ஒரு​மு​கச் சிந்​தனை...​ போன்​றவை நாலா​பக்​க​மும் பர​விக் கிடப்​பதை நாம் கவ​லை​யு​டன் உற்​று​நோக்க வேண்​டி​யுள்​ளது.​

ந​வ​நா​க​ரி​கச் சிந்​த​னை​யில் சிக்​கி​யுள்ள இன்​றைய மனி​தர்​கள் பலர்,​​ தங்​கள் கண்​முன் நடக்​கும் எந்​தச் சம்​ப​வங்​க​ளை​யும் கண்​டு​கொள்​வ​தா​கத் தெரி​ய​வில்லை.​ "நமக்​கேன் வம்பு' என்ற மனப்​பான்​மை​யில் அவ​ர​வர் வேலை​யைப் பார்த்​து​விட்​டுச் செல்​லும் வழக்​கம் இன்​றைய சூழ​லில் அதி​க​ரித்து வரு​கி​றது.​

தள்​ளாத வய​தி​லும்,​​ முக்​கி​யப் பணி நிமித்​த​மாக அவ​ச​ர​மா​கப் பஸ்​ஸில் ஏறும் வயோ​தி​கர்​கள்​கூட சிறப்​புக் கட்​டண பஸ்ஸô,​​ எல்.எஸ்.எஸ்.​ பஸ்ஸô,​​ சாதா​ரண பஸ்ஸô என பார்த்​துத்​தான் ஏற​வேண்​டும் என்று நடத்​து​நர்​கள்,​​ ஓட்​டு​நர்​கள் நினைக்​கின்​ற​னர்.​
அப்​ப​டியே ஒரு​வர் அவ​ச​ரத்​தில் பஸ்​ஸில் ஏறி​விட்​டால் அந்​தப் பய​ணிக்கு ஒரு​சில நடத்​து​நர்​க​ளால் கொடுக்​கப்​ப​டும் "அர்ச்​சனை' சொல்​லில் அடங்​காது.​ அந்​தப் ​ பய​ணி​யைக் குறிப்​பிட்ட பஸ் நிறுத்​தத்​தில் இறக்​கி​வி​டு​வ​தற்​குப் பதி​லாக வேறொரு நிறுத்​தத்​தில் வேண்​டு​மென்றே இறக்​கி​வி​டும் செயல்​க​ளை​யும் நாம் பார்க்க முடி​கி​றது.​
ஒரு பய​ணிக்கு இப்​படி நேர்ந்​து​விட்​டதே என நினைத்​துத் திரைப்​ப​டங்​க​ளில் வேண்​டு​மா​னால் "ஹீரோ' தட்​டிக்​கேட்​பதை ஆவ​லோடு நாம் எதிர்​பார்ப்​போம்;​ ஏற்​றுக்​கொள்​வோம்.​ ஆனால்,​​ இது​போன்ற உண்​மைக் காட்​சியை பஸ்​ஸில் நேர​டி​யா​கப் ​ பார்க்​கும் பய​ணி​க​ளில் ஒரு​வ​ருக்​குக்​கூ​டத் தட்​டிக்​கேட்​கும் மனப்​பான்மை இல்​லா​மல் வாய்​மூடி மெüனி​க​ளா​கி​வி​டு​கின்​ற​னர்.​

ப​ய​ணி​க​ளி​டம் அன்​பும்,​​ பரி​வும் காட்​டு​வேன் என அவர்​கள் ​(ஓட்​டு​நர்,​​ நடத்​து​நர்)​ பணி​யில் சேர்ந்​த​போது எடுத்​துக்​கொண்ட உறு​தி​மொழி எங்கே போனது?​

"வரு​மா​னம் ஈட்​டி​வந்த குடும்​பத் தலை​வர் திடீ​ரென மர​ண​ம​டைய நேரி​டு​கி​றது.​ 3 பெண் குழந்​தை​களை வைத்​துக்​கொண்டு 35 வயதே ஆன அவ​ரது மனைவி,​​ அர​சின் சமூ​க​ந​லப் பாது​காப்​புத் திட்​டத்​தில் உத​வித் தொகைக்​காக விண்​ணப்​பித்து காத்​துக்​கி​டக்​கி​றார்.​

அ​வ​ருக்​குச் சம்​பந்​தப்​பட்ட தாலுகா அலு​வ​ல​கத்​தில் இருந்து அழைப்பு வரு​கி​றது.​ உங்​க​ளுக்​கான உத​வித்​தொகை ரூ.10,000}க்கான காசோலை தயா​ராக உள்​ளது.​ ரூ.3 ஆயி​ரம் லஞ்​சம் கொடுத்​தால் காசோ​லை​யைப் பெற்​றுக்​கொள்​ள​லாம் என அரசு ஊழி​யர் ஒரு​வர் அந்த பெண்​ணி​டம் "பேரம்' பேசு​கி​றார்.​ அந்​தப் பெண்​மணி லஞ்ச ஒழிப்பு போலீ​ஸô​ரை​நாடி தனது உரி​மை​யைப் ​(உத​வித்​தொ​கையை)​ பெற்​றுக்​கொண்​டார்' என்று பத்​தி​ரி​கைச் செய்தி தெரி​விக்​கி​றது.​

இச்​சம்​ப​வத்​தில்,​​ வாழ​வேண்​டிய வய​தில் கண​வனை இழந்து,​​ 3 பெண் குழந்​தை​களை வைத்​துக்​கொண்டு சமு​தா​யத்​தில் போராட வேண்​டிய பெண்​ணுக்கு,​​ ஆறு​த​லாக அரசு அளிக்​கும் உத​வித்​தொ​கைக்​கு​கூட ஈவு​இ​ரக்​கமே இல்​லா​மல் லஞ்​சம் கேட்​கும் அதி​கா​ரி​யின் மனப்​போக்கை நாம் என்​ன​வென்று சொல்​வது!​
க​ண​வனை இழந்து மனம் நொந்து தவிக்​கும் இது​போன்ற ஒரு பெண்​ணி​டம் இத​யமே இல்​லா​மல் கொள்​ளை​ய​டிக்​கும் இது​போன்ற ஒரு​சில அதி​கா​ரி​க​ளின் "ஈர​மில்லா' எண்​ணங்​களை எப்​படி,​​ யாரால் மாற்​று​வது?​

அண்​மை​யில் மது​ரை​யில் நடந்த சம்​ப​வம் இது }​ ஒரு இளம் போலீஸ்​கா​ரர் மனைவி ஒரு​வர் தீயிட்​டுத் தற்​கொ​லைக்கு முயன்​றுள்​ளார்.​ அவ​ரைக் காப்​பாற்​றச் சென்​ற​போது அந்த போலீஸ்​கா​ர​ரும் தீக்​கா​ய​ம​டைந்​தார்.​
இரு​வ​ருமே ஒரு பிர​பல மருத்​து​வ​ம​னை​யில் அனு​ம​திக்​கப்​பட்​ட​னர்.​ 30 சத​வி​கி​தமே தீக்​கா​ய​ம​டைந்த அந்​தப் பெண்,​​ சுமார் 50 தினங்​கள் வரை அந்த மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்​சை​யில் இருந்து உயி​ரி​ழந்​தார்.​ இதில்,​​ மன​தைப் பத​ற​வைக்​கும் விஷ​யம் என்​ன​வென்​றால்,​​ மருந்து,​​ மாத்​திரை,​​ சிகிச்​சைக்​கான கட்​ட​ணங்​கள் முழு​வ​தை​யும் வசூல் செய்த பின்​னரே அந்​தப் பெண் உயி​ரி​ழந்​து​விட்​ட​தாக உற​ வி​னர்​க​ளுக்​குத் தெரி​விக்​கப்​பட்​டது.​

ம​னி​த​நே​ய​மற்ற இது​போன்ற செயல் இப்​பூ​வு​ல​கில் வேறெங்​கும் நடக்​குமா என்​பதை நாம் கற்​பனை செய்​து​கூ​டப் பார்க்க முடி​ய​வில்லை.​
மர​ணப் படுக்​கை​யில் உள்ள மனித உயிர்​க​ளுக்கு விலை வைத்து,​​ பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தி​ன​ருக்கு உலை​யும் வைத்து பணம் சம்​பாத்​தி​யமே ஒரே குறிக்​கோள் என்ற நோக்​கத்​தில் பய​ணிக்​கும் ஒரு​சில மருத்​து​வ​ம​னை​க​ளின் போக்​கால் ஏற்​ப​டும் விப​ரீ​தத்தை நாம் நினைத்​துப் பார்க்​கக்​கூட முடி​ய​வில்லை.​

பார்ப்​ப​தற்கே அரு​வெ​றுப்​பான தோற்​றத்​து​டன்,​​ ஈ மொய்க்​கும் நிலை​யில் இருந்த தொழு​நோ​யா​ளி​க​ளை​யும் தனது கரு​ணைக் கண்​ணால் உற்​று​நோக்கி,​​ அவர்​க​ளி​டத்​தில் மனதை மட்​டும் ​ பார்த்​துப் பேசி,​​ அர​வ​ணைத்து,​​ தாய்மை போற்​றிய அன்னை தெரஸô வாழ்ந்​த​தும் இப்​பூ​வு​ல​கில்​தானே.​

க​ட​வு​ளுக்கு இணை​யாக மதிக்​கப்​ப​டும் மருத்​துவ உல​கமே இப்​ப​டித் திசை​மா​றிச் செல்​லத் தொடங்​கி​யுள்ள இந்த பேரா​பத்து எங்கு போய் முடி​யும்?​

து​ளி​யும் கரு​ணை​யில்​லாத கல் நெஞ்​சக்​கா​ரர்​க​ளின் இது போன்ற தவ​று​கள்,​​ சமு​தா​யத்​தில் எதிர்​வி​ளை​வு​களை ஏற்​ப​டுத்​தும் என்​பது சமூக ஆர்​வ​லர்​க​ளின் கவலை.​

எ​னவே,​​ இது​போன்ற மனி​தர்​க​ளின் தவ​று​கள் உரிய நேரத்​தில் தண்​டிக்​கப்​ப​ட​வேண்​டும்.​ ஆனால்,​​ பண​ப​லம்,​​ அதி​கா​ர​ப​லம் உள்​ளிட்​ட​வற்​றால் அவர்​கள் காப்​பற்​றப்​பட்​டு​வி​டு​வது சமு​தா​யத்​தின் சாபக்​கேடே.​

இ​த​னால்,​​ கோபம் கொள்​ளும் சமூக அக்​க​றை​யுள்ள சிந்​த​னை​யா​ளர்​கள் கிளர்ந்​தெழ வேண்​டிய சூழ்​நிலை உரு​வா​கும்.​ இது​போன்ற கிளர்ச்​சி​களை ஆரம்​பத்​தி​லேயே தடுக்க ஆட்​சி​யா​ளர்​கள் முன்​வ​ர​வேண்​டும்.​ இல்​லை​யென்​றால் வழக்​கம்​போல் "தும்பை விட்டு வாலைப் பிடித்த' கதை​யா​கி​வி​டும்.
கட்டுரையாளர் : கொ.காளீஸ்​வ​ரன்
நன்றி : தினமணி

கேள்வி கேட்​பார் இல்​லையா?

பொது மக்​க​ளுக்கு ஏற்​ப​டும் குறை​பா​டு​கள் ஒன்று சட்​டத்​தின் தவ​றான விதி​மு​றை​க​ளால் இருக்​க​லாம் அல்​லது அரசு நிர்​வா​கத்​தில் நில​வும் கால​தா​ம​தம்,​​ அலட்​சி​யப் போக்கு,​​ ஊழல் போன்​ற​வற்​றால் மக்​கள் அவ​தி​யு​ற​லாம்.

சட்​டத்​தின் குறை​பா​டு​களை நீக்​கு​வ​தற்​கான அதி​கா​ரம் நாடா​ளு​மன்​றம் அல்​லது சட்​ட​மன்​றங்​க​ளுக்கு இருக்​கி​றது.​ நிர்​வா​கத்​தின் சீர்​கே​டு​க​ளால் ​ நடை​பெ​றும் அநீ​தி​க​ளைக் களை​ய​வும்,​​ அர​சாங்​கத்​தின் வரவு-​செல​வுத் திட்​டங்​க​ளைக் கண்​கா​ணித்து மக்​க​ளின் தேவை​களை நிறை​வேற்​றும் வகை​யில் மக்​கள் பிர​தி​நி​தி​கள் செயல்​பட வேண்​டும்.​

அன்​றாட வாழ்​வில் நாட்டு மக்​க​ளுக்கு ஏற்​ப​டும் பல்​வேறு குறை​களை நிர்​வா​கத்​தின் கவ​னத்​துக்​குக் கொண்​டு​வந்து தக்க நட​வ​டிக்​கை​களை எடுக்க நாடா​ளு​மன்ற முறை​யில் உள்ள வாய்ப்​பு​
க​ளில் மிக முக்​கி​ய​மா​னது கேள்வி நேரம்.​

கேள்வி நேரம் என்​பது இங்​கி​லாந்​தின் நாடா​ளு​மன்​றத்​தில் 18-ம் நூற்​றாண்​டில் தொடங்​கி​யது.​ ​ ​ ​ ​ ​

இங்​கி​லாந்து நாடா​ளு​மன்ற முறை​யைப் பின்​பற்​றும் இந்​திய நாடா​ளு​மன்​றத்​தின் இரு அவை​க​ளி​லும் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேர​மாக ஒதுக்​கப்​ப​டு​கி​றது.​ அதி​க​பட்​ச​மாக இரு அவை​க​ளி​லும் நேரிடை பதி​லுக்​காக தலா இரு​பது கேள்​வி​கள் எடுத்​துக்​கொள்​ளப்​ப​டும்.​ ஒவ்​வொரு நாளும் குறிப்​பி​டப்​பட்ட துறை​யின் அமைச்​சர் நேரி​டை​யாக அவை​யில் பதி​ல​ளிப்​ப​தற்​காக நட்​சத்​தி​ரக் குறி​யி​டப்​பட்ட இரு​பது கேள்​வி​கள் குலுக்​கல் முறை​யில் முன்​ன​தா​கவே தேர்ந்​தெ​டுக்​கப்​ப​டு​கின்​றன.​ அவை​யின் விதி​மு​றைப்​படி ஓர் உறுப்​பி​ன​ருக்கு ஒரு நட்​சத்​தி​ரக் குறி​யிட்ட கேள்​விக்கு மேல் ஒரு நாளைக்​குத் தரப்​ப​டு​வ​தில்லை.​

ஒரே கேள்​வி​யைக் கேட்​ப​வர்​கள் பட்​டிய​லில் ஒன்​றுக்​கும் மேற்​பட்​ட​வர்​கள் இருந்​தால் குலுக்​கல் முறை​யில் இரு​வர் தேர்ந்​தெ​டுக்​கப்​ப​டு​வர்.​ அவை​யில் நேரி​டை​யா​கப் பதி​ல​ளிக்​கப்​ப​டா​மல் இரு அவை​க​ளி​லும் தனித்​த​னி​யாக ஒவ்​வொரு நாளும் இரு​நூறு கேள்​வி​க​ளுக்கு எழுத்து மூல​மா​கப் பதில் தரப்​பட்டு அவை​யின் முன் வைக்​கப்​ப​டும்.​ இந்த முறை​யால்,​​ இரு அவை​க​ளி​லும் சேர்ந்து நாள் ஒன்​றுக்கு 440 கேள்வி-​பதில்​கள் மூலம் அர​சாங்​கத்​தின் பல்​வேறு நட​வ​டிக்​கை​கள் பற்​றிய விவ​ரங்​களை நாட்டு மக்​க​ளுக்கு வெளிப்​ப​டுத்​தும் வாய்ப்பு மக்​கள் பிர​தி​நி​தி​க​ளுக்​குக் கிடைக்​கி​றது.​ ​ ​ ​

545 உறுப்​பி​னர்​க​ளை​யு​டைய மக்​க​ள​வை​யின் கேள்வி நேரத்​தில்,​​ இரு​பது கேள்​வி​க​ளுக்கு மட்​டுமே நேரடி பதில் ஒரு மணி நேரத்​தில் கிடைக்​கும் என்​ப​தால் அத்​த​கைய வாய்ப்பு மிக அரி​ய​தா​கத்​தான் ஓர் உறுப்​பி​ன​ருக்கு அமை​யும்.​ திங்​கள் முதல் வெள்ளி வரை,​​ வாரத்​தில் அமைச்​ச​ர​கத் துறை​கள் அனைத்​தும் ஐந்து பிரி​வு​க​ளா​கப் பிரிக்​கப்​ப​டு​கி​றது.​ உறுப்​பி​னர் எழுப்​பும் கேள்வி அந்த பிரச்​னைக்​கு​ரிய அமைச்​ச​ரைக் குறிப்​பிட்டு நேரி​டை​யாக அனுப்​பப்​ப​டு​கி​றது.​ கேள்​விக்​கு​ரிய நாளுக்கு ஐந்து நாள் முன்​ன​தா​க​வும்,​​ 21 நாள்​க​ளுக்​குள்​ளா​க​வும் உறுப்​பி​னர் தமது கேள்​வியை அனுப்ப வேண்​டும்.​ தேர்ந்​தெ​டுக்​கப்​பட்ட கேள்​வி​க​ளின் விவ​ரம் அச்​சி​டப்​பட்டு உறுப்​பி​னர்​கள் அனை​வ​ருக்​கும் ஐந்​தாறு நாள்​க​ளுக்கு முன்​ன​தாக அனுப்​பப்​பட்​டு​வி​டும்.​ ​ ஆக,​​ தன்​னு​டைய கேள்வி வரும் நாளன்று குறிப்​பிட்ட உறுப்​பி​னர் அந்​தக் கேள்​விக்​கு​ரிய பிரச்​னை​க​ளைத் துணைக் கேள்​வி​கள் மூலம் கேட்​ப​தற்​கான விவ​ரங்​க​ளைச் சேக​ரித்து வைத்து,​​ குறிப்​பிட்ட அமைச்​ச​ரின் துறை நிர்​வா​கத்​தில் உள்ள குறை​பா​டு​களை வெளிப்​ப​டுத்த ஆயத்​த​மாக இருக்க வேண்​டும்.​

இந்​திய நாடா​ளு​மன்ற மக்​க​ள​வை​யில் கடந்த காலத்​தில் ​ இரு​பது கேள்​வி​க​ளில் நான்கு அல்​லது ஐந்து கேள்​வி​க​ளுக்கு மட்​டுமே பதில் பெறப்​பட்டு அதற்​குள் கேள்வி நேரம் முடிந்​து​வி​டும்.

​ இங்​கி​லாந்து மக்​க​ள​வை​யில் கேள்வி-​பதில்​கள் மிக விரை​வா​க​வும்,​​ சுருக்​க​மா​க​வும் இருக்​கும்.​ உதா​ர​ண​மாக,​​ 30-11-2009 திங்​கள்​கி​ழமை ஒரு மணி நேரத்​தில் 19 கேள்​வி​க​ளுக்​குப் பதில்​கள் தரப்​பட்​டன.​ ​ ​ ​

அதே 30-11-2009 திங்​கள்​கி​ழமை நடை​பெற்ற இந்​திய மக்​க​ள​வைக் கூட்​டத்​தின் கேள்வி நேரத்​தில் ஒரு புதிய சாதனை நிகழ்த்​தப்​பட்​டி​ருக்​கி​றது.​ அன்​றைய தினம் கேட்​கப்​ப​ட​வி​ருந்த இரு​பது கேள்​வி​க​ளுக்​குத் தொடர்​பு​டைய 38 உறுப்​பி​னர்​க​ளில் 4 பேர் மட்​டுமே வருகை தந்து தம்​மு​டைய கேள்​வி​க​ளைக் கேட்​ட​னர்.​ மீத​மி​ருந்த கேள்​வி​க​ளுக்கு உரிய 34 உறுப்​பி​னர்​கள் கேள்வி நேரத்​தில் அவை​யில் இல்​லாத கார​ணத்​தால் அரை மணி நேரத்​தில் கேள்வி நேரம் முடிவு பெற்று அவை நண்​ப​கல் 12 மணிக்கு ஒத்​தி​வைக்​கப்​பட்​டது.​ இது​வரை நடை​பெற்ற மக்​க​ள​வைக் கூட்​டங்​க​ளில் குறிப்​பிட்ட ஒரு மணி நேரத்​துக்​குள் பெரும்​பா​லான கேள்​வி​கள் பதில் தரப்​ப​டா​மல் விடப்​பட்​டி​ருக்​குமே தவிர,​​ 26 நிமி​டத்​துக்​குள் கேள்வி நேரம் முற்​றுப் பெற்​றது கிடை​யாது.​ ஒதுக்​கப்​பட்ட ஒரு மணி நேரத்​துக்கு முன்​ன​தா​கக் கேள்வி கேட்ட உறுப்​பி​னர்​கள் அவை​யில் இல்​லா​த​தால்,​​ அவை ஒத்​தி​வைக்​கப்​பட்​டது என்​பது இந்​திய நாடா​ளு​மன்ற வர​லாற்​றில் ஒரு வேத​னை​யான சாதனை ஆகும்.​ ​

கேள்​வி​கள் கேட்​டு​விட்​டுக் குறிப்​பிட்ட தரு​ணத்​தில் அவை​யில் இல்​லாத 34 பேர்​க​ளில் கட்​சி​வா​ரி​யா​கப் பார்த்​தால் ​ காங்​கி​ரஸ் ​(12),​ பா.ஜ.க.​ ​(7),​ ஜே.டி.யு.​ ​(3),​ சிவ​சேனா ​(3),​ சி.பி.எம்.​ ​(2),​ சி.பி.ஐ.​ ​(2) மற்​றும் ஓர் உறுப்​பி​னர் மட்​டும் வராத கட்​சி​கள் சமாஜ்​வாதி,​​ கே.சி.எம்.,​​ ஏ.எம்.எம்.ஐ.,​​ பிஜு ஜன​தா​தள்,​​ சுயேச்சை ஆகி​யோர் அடங்​கும்.​ ஆக,​​ ஆளுங்​கட்​சி​யி​னர் கேள்வி நேரத்​தில் அலட்​சி​ய​மாக இருப்​ப​தை​விட,​​ கேள்வி கேட்ட எதிர்க்​கட்​சி​யி​னர் பலர் மக்​க​ளுக்​குப் பணி​யாற்​றத் தமக்​குக் கிடைத்த அரிய வாய்ப்​பைப் பயன்​ப​டுத்​தத் தவ​றி​யது கண்​ட​னத்​துக்​கு​ரி​ய​தா​கும்.​ ​

மக்​க​ள​வை​யில் இப்​படி என்​றால்,​​ மாநி​லங்​க​ள​வை​யி​லும் இந்த நோய் வேக​மா​கப் பரவி வரு​கி​றது.​ 2-12-2009 அன்று மாநி​லங்​க​ள​வை​யில் கேள்வி கேட்ட 5 உறுப்​பி​னர்​கள் வர​வில்லை.​ மேலும் 8-12-2009 அன்று கேள்வி கேட்ட 7 உறுப்​பி​னர்​கள் அவை​யில் இல்​லாத கார​ணத்​தால் அந்​தக் கேள்​வி​க​ளுக்கு நேரி​டை​யான பதில்​கள் அவை​யில் தரப்​ப​ட​வில்லை.​ ​

சென்ற 14-வது மக்​க​ள​வை​யின் ஐந்​தாண்டு காலத்​தில் ​ மொத்​தம் 89,000 கேள்​வி​கள் கேட்​கப்​பட்​ட​தா​கத் தெரி​கி​றது.​ 14-வது மக்​க​ள​வை​யின் ஐந்​தாண்டு காலத்​தில் 56 உறுப்​பி​னர்​கள் எத்​த​கைய கேள்​வி​யை​யும் கேட்​க​வில்லை என்று ஓர் ஆய்​வ​றிக்கை கூறு​கி​றது.​ அவர்​க​ளில் முக்​கி​ய​மா​ன​வர்​கள் தேவ கவுடா,​​ மம்தா பானர்ஜி,​​ அஜீத் சிங்,​​ உமர் அப்​துல்லா,​​ கல்​யாண் சிங்,​​ ஜெக​தீஷ் டைட்​லர்,​​ தர்​மேந்​திரா,​​ கோவிந்தா போன்ற கட்​சித் தலை​வர்​கள் பல​ரும்,​​ திரை​யு​ல​கப் பிர​மு​கர்​க​ளும் ஒரு கேள்​வி​கூட கேட்​ட​தில்லை.​ மேலும்,​​ 67 உறுப்​பி​னர்​கள் அந்த ஐந்​தாண்டு காலத்​தில் பத்​துக் கேள்​வி​கள் அல்​லது அதற்​கும் குறை​வா​கக் கேட்​டி​ருக்​கி​றார்​கள்.​ மொத்த உறுப்​பி​னர்​க​ளில் 23 சத​வி​கி​தம் பேர் கேள்வி கேட்​கும் பழக்​கம் இல்​லா​த​வர்​க​ளாக இருந்​த​னர்.​ ​ ​

சென்ற மக்​க​ள​வை​யில் சிவ​சேனா கட்சி உறுப்​பி​னர்​கள் ஆனந்​த​ராவ் வித்​தோபா அட்​சுல் 1,255 கேள்​வி​க​ளை​யும்,​​ சிவாஜி அதல்​ராவ் பாட்​டில் 1,251 கேள்​வி​க​ளை​யும் கேட்டு முதல் இரண்டு இடங்​க​ளைப் பெற்​றி​ருந்​த​னர்.​ இதை வைத்து,​​ அகில இந்​திய அர​சிய​லில் சிவ​சேனா உறுப்​பி​னர்​க​ளுக்கு இருந்த அக்​கறை மற்ற கட்​சி​யி​ன​ருக்கு இல்​லாது போயிற்று என்று கூற முடி​யுமா?​

30-11-2009 அன்று கேள்வி கேட்டு அவைக்கு வராத உறுப்​பி​னர்​கள் பற்றி அந்​தந்​தக் கட்​சித் தலை​வர்​க​ளுக்​குக் கடி​தம் எழு​தப்​போ​வ​தாக அவைத்​த​லை​வர் மீரா குமார் அறி​வித்​துள்​ளார்.​ அவை​யின் நட​வ​டிக்​கை​க​ளுக்​காக நிமி​டம் ஒன்​றுக்கு ரூ.26,000 அர​சாங்​கப்​ப​ணம் செல​வி​டப்​ப​டு​கி​றது.​ அன்று கேள்வி கேட்டு வராத உறுப்​பி​னர்​க​ளால் அவை​யின் நட​வ​டிக்கை அரை மணி நேரம் ஒத்​திப்​போ​டப்​பட்டு வீணான செலவு ரூ.​ 7.8 லட்​சம் ஆகும்.​ இது அர​சாங்​கப்​ப​ணம் என்​றா​லும் மக்​க​ளின் வரிப்​ப​ணம்.​

நா​டா​ளு​மன்​றத்​தில் எழுப்​பப்​பட்ட கேள்​வி​யின் விளை​வா​கத்​தான் ஹரி​தாஸ் முந்த்ரா என்​ப​வ​ருக்கு இந்​திய ஆயுள் காப்​பீட்டு நிறு​வ​னத்​தி​ட​மி​ருந்து தவ​றான முறை​யில் நிதி​யு​தவி அளிக்​கப்​பட்​ட​தென்று உறுப்​பி​னர் பெரோஸ் காந்தி ​(இந்​திரா காந்​தி​யின் கண​வர்)​ 1958-ல் மக்​க​ள​வை​யில் தீர்​மா​னம் கொண்​டு​வந்​த​தன் பேரில்,​​ பம்​பாய் உயர் நீதி​மன்​றத்​தின் தலைமை நீதி​பதி எம்.சி.சாக்லா தலை​மை​யில் விசா​ர​ணைக் குழு அமைக்​கப்​பட்​டது.​ அக்​குழு அளித்த அறிக்​கை​யின்​படி காங்​கி​ரஸ் கட்​சி​யின் தேர்​தல் நிதிக்கு முந்த்ரா உத​வி​யி​ருப்​ப​தா​க​வும்,​​ அதன்​பே​ரில்,​​ அவ​ரு​டைய பங்​கு​களை மிக அதி​க​மான விலைக்கு வாங்க நிதி​ய​மைச்​சர் டி.டி.கிருஷ்​ண​மாச்​சாரி உத்​த​ர​வின்​படி இந்​திய ஆயுள் காப்​பீட்டு நிறு​வ​னம் முன்​வந்​த​தும் தெரி​ய​வந்​தது.​ இது,​​ அர​சாங்க அதி​கா​ரத்தை தவ​றா​கப் பயன்​ப​டுத்​திய ஊழல் விவ​கா​ரம் என்று சாக்லா குழு தீர்​மா​னித்​தது.​ அதன் பிறகு,​​ நிதி​ய​மைச்​சர் டி.டி.கிருஷ்​ண​மாச்​சாரி பத​வியி​லி​ருந்து வெளி​யே​றி​னார்.​

1973 ஆகஸ்டு 15-ல் கல்​வி​ய​மைச்​சர் நூருல் ஹாசன் முயற்​சி​யால் சுதந்​திர இந்​தி​யா​வின் முதல் 25 ஆண்​டு​கள் பற்​றிய ஒரு வர​லாற்​றைத் தொகுத்து காலப்​பெட்​ட​கத்​தில் வைத்து தில்லி செங்​கோட்டை அரு​கில் ஆழப் புதைத்​தார்​கள்.​ விஞ்​ஞான முறை​யால் அப்​பெட்​ட​கத்தை ஐயா​யி​ரம் ஆண்​டு​க​ளுக்​குப்​பின் வரு​ப​வர்​க​ளால் தாம் திறந்து பார்க்க முடி​யும் என்று கூறப்​பட்​டது.​ ஆயி​னும்,​​ பெட்​ட​கத்​தில் வைக்​கப்​பட்ட வர​லாற்​றில் பல தவ​றான,​​ தாறு​மா​றான விவ​ரங்​கள் இருப்​ப​தாக ஒரு கேள்வி 1973 நவம்​ப​ரில் மக்​க​ள​வை​யில் வந்​தது.​ அதற்கு,​​ பெட்​ட​கத்​தி​லுள்ள வர​லாறு மிக​வும் ரக​சி​ய​மா​னது,​​ அது ஐயா​யி​ரம் ஆண்​டு​க​ளுக்​குப் பிற​கு​தான் பார்க்​கப்​பட வேண்​டும் என்று கல்​வி​ய​மைச்​சர் பதி​ல​ளித்​தார்.​ ​

ஆ​யி​னும்,​​ 1977 மார்ச்​சில் ​ மொரார்ஜி தேசாய் தலை​மை​யில் ஜனதா அர​சாங்​கம் அமைந்​த​தும்,​​ அந்​தக் காலப்​பெட்​ட​கம் தோண்​டி​யெ​டுக்​கப்​பட்டு,​​ அதி​லி​ருந்த வர​லாற்​றுக் குறிப்​பு​கள் தவ​றா​னவை என்று நிரூ​ப​ண​மா​னது.​ இதில் எனக்​கும் பங்கு உண்டு.​

சி​று​பொறி,​​ பெரும் தீயாக மாறக்​கூ​டும்.​ அதைப்​போல்,​​ ஒரு சிறிய கேள்வி பெரிய வர​லாற்​றுத் திருப்​பத்தை உண்​டாக்​கக்​கூ​டும்.​ ஆக,​​ கேள்வி நேரத்தை எந்த வகை​யி​லும் ஒதுக்கி வைப்​பது அல்​லது அலட்​சி​யம் செய்​வது,​​ நாட்டு மக்​க​ளுக்​கும்,​​ நாடா​ளு​மன்​றத்​துக்​கும் இழைக்​கப்​ப​டும் மாபெ​ரும் துரோ​க​மா​கும்.​
கட்டுரையாளர் : இரா.செழி​யன்
நன்றி : தினமணி

மும்பை தாக்குதல் : தாஜ் ஹோட்டலுக்கு ரூ.114 கோடி இழப்பு

மும்பை தாக்குதல் காரணமாக அதிகம் பாதிப்புக்கு உள்ளான தாஜ் ஹோட்டலுக்கு ரூ.114 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த தாஜ் ஹோட்டல் பொது மேலாளர் வித்யாதர் வைத்யா, இது திட்டவட்டமான இழப்பு தொகை இல்லை எனவும், இன்னும் இழப்பின் மதிப்பு குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இழப்பை ஆய்வு செய்து, சரி செய்ய டாடா குரூப்ஸ் நிறுவனத்தின் ஹோட்டல் துறை முன்வந்துள்ளது. தாஜ் ஹோட்டலின் 6 வது மாடியில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான தாஜ் நினைவுச் சின்னம் முற்றிலும் சேதமடைந்திருப்பதாக தாஜ் பொது மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும் 12வது மாடியில் உள்ள தாஜ் மஹால் மாதிரி வடிவம், 2 உணவகங்கள் ஆகியனவும் சேதமடைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கான சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்