Saturday, December 12, 2009

கேள்வி கேட்​பார் இல்​லையா?

பொது மக்​க​ளுக்கு ஏற்​ப​டும் குறை​பா​டு​கள் ஒன்று சட்​டத்​தின் தவ​றான விதி​மு​றை​க​ளால் இருக்​க​லாம் அல்​லது அரசு நிர்​வா​கத்​தில் நில​வும் கால​தா​ம​தம்,​​ அலட்​சி​யப் போக்கு,​​ ஊழல் போன்​ற​வற்​றால் மக்​கள் அவ​தி​யு​ற​லாம்.

சட்​டத்​தின் குறை​பா​டு​களை நீக்​கு​வ​தற்​கான அதி​கா​ரம் நாடா​ளு​மன்​றம் அல்​லது சட்​ட​மன்​றங்​க​ளுக்கு இருக்​கி​றது.​ நிர்​வா​கத்​தின் சீர்​கே​டு​க​ளால் ​ நடை​பெ​றும் அநீ​தி​க​ளைக் களை​ய​வும்,​​ அர​சாங்​கத்​தின் வரவு-​செல​வுத் திட்​டங்​க​ளைக் கண்​கா​ணித்து மக்​க​ளின் தேவை​களை நிறை​வேற்​றும் வகை​யில் மக்​கள் பிர​தி​நி​தி​கள் செயல்​பட வேண்​டும்.​

அன்​றாட வாழ்​வில் நாட்டு மக்​க​ளுக்கு ஏற்​ப​டும் பல்​வேறு குறை​களை நிர்​வா​கத்​தின் கவ​னத்​துக்​குக் கொண்​டு​வந்து தக்க நட​வ​டிக்​கை​களை எடுக்க நாடா​ளு​மன்ற முறை​யில் உள்ள வாய்ப்​பு​
க​ளில் மிக முக்​கி​ய​மா​னது கேள்வி நேரம்.​

கேள்வி நேரம் என்​பது இங்​கி​லாந்​தின் நாடா​ளு​மன்​றத்​தில் 18-ம் நூற்​றாண்​டில் தொடங்​கி​யது.​ ​ ​ ​ ​ ​

இங்​கி​லாந்து நாடா​ளு​மன்ற முறை​யைப் பின்​பற்​றும் இந்​திய நாடா​ளு​மன்​றத்​தின் இரு அவை​க​ளி​லும் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேர​மாக ஒதுக்​கப்​ப​டு​கி​றது.​ அதி​க​பட்​ச​மாக இரு அவை​க​ளி​லும் நேரிடை பதி​லுக்​காக தலா இரு​பது கேள்​வி​கள் எடுத்​துக்​கொள்​ளப்​ப​டும்.​ ஒவ்​வொரு நாளும் குறிப்​பி​டப்​பட்ட துறை​யின் அமைச்​சர் நேரி​டை​யாக அவை​யில் பதி​ல​ளிப்​ப​தற்​காக நட்​சத்​தி​ரக் குறி​யி​டப்​பட்ட இரு​பது கேள்​வி​கள் குலுக்​கல் முறை​யில் முன்​ன​தா​கவே தேர்ந்​தெ​டுக்​கப்​ப​டு​கின்​றன.​ அவை​யின் விதி​மு​றைப்​படி ஓர் உறுப்​பி​ன​ருக்கு ஒரு நட்​சத்​தி​ரக் குறி​யிட்ட கேள்​விக்கு மேல் ஒரு நாளைக்​குத் தரப்​ப​டு​வ​தில்லை.​

ஒரே கேள்​வி​யைக் கேட்​ப​வர்​கள் பட்​டிய​லில் ஒன்​றுக்​கும் மேற்​பட்​ட​வர்​கள் இருந்​தால் குலுக்​கல் முறை​யில் இரு​வர் தேர்ந்​தெ​டுக்​கப்​ப​டு​வர்.​ அவை​யில் நேரி​டை​யா​கப் பதி​ல​ளிக்​கப்​ப​டா​மல் இரு அவை​க​ளி​லும் தனித்​த​னி​யாக ஒவ்​வொரு நாளும் இரு​நூறு கேள்​வி​க​ளுக்கு எழுத்து மூல​மா​கப் பதில் தரப்​பட்டு அவை​யின் முன் வைக்​கப்​ப​டும்.​ இந்த முறை​யால்,​​ இரு அவை​க​ளி​லும் சேர்ந்து நாள் ஒன்​றுக்கு 440 கேள்வி-​பதில்​கள் மூலம் அர​சாங்​கத்​தின் பல்​வேறு நட​வ​டிக்​கை​கள் பற்​றிய விவ​ரங்​களை நாட்டு மக்​க​ளுக்கு வெளிப்​ப​டுத்​தும் வாய்ப்பு மக்​கள் பிர​தி​நி​தி​க​ளுக்​குக் கிடைக்​கி​றது.​ ​ ​ ​

545 உறுப்​பி​னர்​க​ளை​யு​டைய மக்​க​ள​வை​யின் கேள்வி நேரத்​தில்,​​ இரு​பது கேள்​வி​க​ளுக்கு மட்​டுமே நேரடி பதில் ஒரு மணி நேரத்​தில் கிடைக்​கும் என்​ப​தால் அத்​த​கைய வாய்ப்பு மிக அரி​ய​தா​கத்​தான் ஓர் உறுப்​பி​ன​ருக்கு அமை​யும்.​ திங்​கள் முதல் வெள்ளி வரை,​​ வாரத்​தில் அமைச்​ச​ர​கத் துறை​கள் அனைத்​தும் ஐந்து பிரி​வு​க​ளா​கப் பிரிக்​கப்​ப​டு​கி​றது.​ உறுப்​பி​னர் எழுப்​பும் கேள்வி அந்த பிரச்​னைக்​கு​ரிய அமைச்​ச​ரைக் குறிப்​பிட்டு நேரி​டை​யாக அனுப்​பப்​ப​டு​கி​றது.​ கேள்​விக்​கு​ரிய நாளுக்கு ஐந்து நாள் முன்​ன​தா​க​வும்,​​ 21 நாள்​க​ளுக்​குள்​ளா​க​வும் உறுப்​பி​னர் தமது கேள்​வியை அனுப்ப வேண்​டும்.​ தேர்ந்​தெ​டுக்​கப்​பட்ட கேள்​வி​க​ளின் விவ​ரம் அச்​சி​டப்​பட்டு உறுப்​பி​னர்​கள் அனை​வ​ருக்​கும் ஐந்​தாறு நாள்​க​ளுக்கு முன்​ன​தாக அனுப்​பப்​பட்​டு​வி​டும்.​ ​ ஆக,​​ தன்​னு​டைய கேள்வி வரும் நாளன்று குறிப்​பிட்ட உறுப்​பி​னர் அந்​தக் கேள்​விக்​கு​ரிய பிரச்​னை​க​ளைத் துணைக் கேள்​வி​கள் மூலம் கேட்​ப​தற்​கான விவ​ரங்​க​ளைச் சேக​ரித்து வைத்து,​​ குறிப்​பிட்ட அமைச்​ச​ரின் துறை நிர்​வா​கத்​தில் உள்ள குறை​பா​டு​களை வெளிப்​ப​டுத்த ஆயத்​த​மாக இருக்க வேண்​டும்.​

இந்​திய நாடா​ளு​மன்ற மக்​க​ள​வை​யில் கடந்த காலத்​தில் ​ இரு​பது கேள்​வி​க​ளில் நான்கு அல்​லது ஐந்து கேள்​வி​க​ளுக்கு மட்​டுமே பதில் பெறப்​பட்டு அதற்​குள் கேள்வி நேரம் முடிந்​து​வி​டும்.

​ இங்​கி​லாந்து மக்​க​ள​வை​யில் கேள்வி-​பதில்​கள் மிக விரை​வா​க​வும்,​​ சுருக்​க​மா​க​வும் இருக்​கும்.​ உதா​ர​ண​மாக,​​ 30-11-2009 திங்​கள்​கி​ழமை ஒரு மணி நேரத்​தில் 19 கேள்​வி​க​ளுக்​குப் பதில்​கள் தரப்​பட்​டன.​ ​ ​ ​

அதே 30-11-2009 திங்​கள்​கி​ழமை நடை​பெற்ற இந்​திய மக்​க​ள​வைக் கூட்​டத்​தின் கேள்வி நேரத்​தில் ஒரு புதிய சாதனை நிகழ்த்​தப்​பட்​டி​ருக்​கி​றது.​ அன்​றைய தினம் கேட்​கப்​ப​ட​வி​ருந்த இரு​பது கேள்​வி​க​ளுக்​குத் தொடர்​பு​டைய 38 உறுப்​பி​னர்​க​ளில் 4 பேர் மட்​டுமே வருகை தந்து தம்​மு​டைய கேள்​வி​க​ளைக் கேட்​ட​னர்.​ மீத​மி​ருந்த கேள்​வி​க​ளுக்கு உரிய 34 உறுப்​பி​னர்​கள் கேள்வி நேரத்​தில் அவை​யில் இல்​லாத கார​ணத்​தால் அரை மணி நேரத்​தில் கேள்வி நேரம் முடிவு பெற்று அவை நண்​ப​கல் 12 மணிக்கு ஒத்​தி​வைக்​கப்​பட்​டது.​ இது​வரை நடை​பெற்ற மக்​க​ள​வைக் கூட்​டங்​க​ளில் குறிப்​பிட்ட ஒரு மணி நேரத்​துக்​குள் பெரும்​பா​லான கேள்​வி​கள் பதில் தரப்​ப​டா​மல் விடப்​பட்​டி​ருக்​குமே தவிர,​​ 26 நிமி​டத்​துக்​குள் கேள்வி நேரம் முற்​றுப் பெற்​றது கிடை​யாது.​ ஒதுக்​கப்​பட்ட ஒரு மணி நேரத்​துக்கு முன்​ன​தா​கக் கேள்வி கேட்ட உறுப்​பி​னர்​கள் அவை​யில் இல்​லா​த​தால்,​​ அவை ஒத்​தி​வைக்​கப்​பட்​டது என்​பது இந்​திய நாடா​ளு​மன்ற வர​லாற்​றில் ஒரு வேத​னை​யான சாதனை ஆகும்.​ ​

கேள்​வி​கள் கேட்​டு​விட்​டுக் குறிப்​பிட்ட தரு​ணத்​தில் அவை​யில் இல்​லாத 34 பேர்​க​ளில் கட்​சி​வா​ரி​யா​கப் பார்த்​தால் ​ காங்​கி​ரஸ் ​(12),​ பா.ஜ.க.​ ​(7),​ ஜே.டி.யு.​ ​(3),​ சிவ​சேனா ​(3),​ சி.பி.எம்.​ ​(2),​ சி.பி.ஐ.​ ​(2) மற்​றும் ஓர் உறுப்​பி​னர் மட்​டும் வராத கட்​சி​கள் சமாஜ்​வாதி,​​ கே.சி.எம்.,​​ ஏ.எம்.எம்.ஐ.,​​ பிஜு ஜன​தா​தள்,​​ சுயேச்சை ஆகி​யோர் அடங்​கும்.​ ஆக,​​ ஆளுங்​கட்​சி​யி​னர் கேள்வி நேரத்​தில் அலட்​சி​ய​மாக இருப்​ப​தை​விட,​​ கேள்வி கேட்ட எதிர்க்​கட்​சி​யி​னர் பலர் மக்​க​ளுக்​குப் பணி​யாற்​றத் தமக்​குக் கிடைத்த அரிய வாய்ப்​பைப் பயன்​ப​டுத்​தத் தவ​றி​யது கண்​ட​னத்​துக்​கு​ரி​ய​தா​கும்.​ ​

மக்​க​ள​வை​யில் இப்​படி என்​றால்,​​ மாநி​லங்​க​ள​வை​யி​லும் இந்த நோய் வேக​மா​கப் பரவி வரு​கி​றது.​ 2-12-2009 அன்று மாநி​லங்​க​ள​வை​யில் கேள்வி கேட்ட 5 உறுப்​பி​னர்​கள் வர​வில்லை.​ மேலும் 8-12-2009 அன்று கேள்வி கேட்ட 7 உறுப்​பி​னர்​கள் அவை​யில் இல்​லாத கார​ணத்​தால் அந்​தக் கேள்​வி​க​ளுக்கு நேரி​டை​யான பதில்​கள் அவை​யில் தரப்​ப​ட​வில்லை.​ ​

சென்ற 14-வது மக்​க​ள​வை​யின் ஐந்​தாண்டு காலத்​தில் ​ மொத்​தம் 89,000 கேள்​வி​கள் கேட்​கப்​பட்​ட​தா​கத் தெரி​கி​றது.​ 14-வது மக்​க​ள​வை​யின் ஐந்​தாண்டு காலத்​தில் 56 உறுப்​பி​னர்​கள் எத்​த​கைய கேள்​வி​யை​யும் கேட்​க​வில்லை என்று ஓர் ஆய்​வ​றிக்கை கூறு​கி​றது.​ அவர்​க​ளில் முக்​கி​ய​மா​ன​வர்​கள் தேவ கவுடா,​​ மம்தா பானர்ஜி,​​ அஜீத் சிங்,​​ உமர் அப்​துல்லா,​​ கல்​யாண் சிங்,​​ ஜெக​தீஷ் டைட்​லர்,​​ தர்​மேந்​திரா,​​ கோவிந்தா போன்ற கட்​சித் தலை​வர்​கள் பல​ரும்,​​ திரை​யு​ல​கப் பிர​மு​கர்​க​ளும் ஒரு கேள்​வி​கூட கேட்​ட​தில்லை.​ மேலும்,​​ 67 உறுப்​பி​னர்​கள் அந்த ஐந்​தாண்டு காலத்​தில் பத்​துக் கேள்​வி​கள் அல்​லது அதற்​கும் குறை​வா​கக் கேட்​டி​ருக்​கி​றார்​கள்.​ மொத்த உறுப்​பி​னர்​க​ளில் 23 சத​வி​கி​தம் பேர் கேள்வி கேட்​கும் பழக்​கம் இல்​லா​த​வர்​க​ளாக இருந்​த​னர்.​ ​ ​

சென்ற மக்​க​ள​வை​யில் சிவ​சேனா கட்சி உறுப்​பி​னர்​கள் ஆனந்​த​ராவ் வித்​தோபா அட்​சுல் 1,255 கேள்​வி​க​ளை​யும்,​​ சிவாஜி அதல்​ராவ் பாட்​டில் 1,251 கேள்​வி​க​ளை​யும் கேட்டு முதல் இரண்டு இடங்​க​ளைப் பெற்​றி​ருந்​த​னர்.​ இதை வைத்து,​​ அகில இந்​திய அர​சிய​லில் சிவ​சேனா உறுப்​பி​னர்​க​ளுக்கு இருந்த அக்​கறை மற்ற கட்​சி​யி​ன​ருக்கு இல்​லாது போயிற்று என்று கூற முடி​யுமா?​

30-11-2009 அன்று கேள்வி கேட்டு அவைக்கு வராத உறுப்​பி​னர்​கள் பற்றி அந்​தந்​தக் கட்​சித் தலை​வர்​க​ளுக்​குக் கடி​தம் எழு​தப்​போ​வ​தாக அவைத்​த​லை​வர் மீரா குமார் அறி​வித்​துள்​ளார்.​ அவை​யின் நட​வ​டிக்​கை​க​ளுக்​காக நிமி​டம் ஒன்​றுக்கு ரூ.26,000 அர​சாங்​கப்​ப​ணம் செல​வி​டப்​ப​டு​கி​றது.​ அன்று கேள்வி கேட்டு வராத உறுப்​பி​னர்​க​ளால் அவை​யின் நட​வ​டிக்கை அரை மணி நேரம் ஒத்​திப்​போ​டப்​பட்டு வீணான செலவு ரூ.​ 7.8 லட்​சம் ஆகும்.​ இது அர​சாங்​கப்​ப​ணம் என்​றா​லும் மக்​க​ளின் வரிப்​ப​ணம்.​

நா​டா​ளு​மன்​றத்​தில் எழுப்​பப்​பட்ட கேள்​வி​யின் விளை​வா​கத்​தான் ஹரி​தாஸ் முந்த்ரா என்​ப​வ​ருக்கு இந்​திய ஆயுள் காப்​பீட்டு நிறு​வ​னத்​தி​ட​மி​ருந்து தவ​றான முறை​யில் நிதி​யு​தவி அளிக்​கப்​பட்​ட​தென்று உறுப்​பி​னர் பெரோஸ் காந்தி ​(இந்​திரா காந்​தி​யின் கண​வர்)​ 1958-ல் மக்​க​ள​வை​யில் தீர்​மா​னம் கொண்​டு​வந்​த​தன் பேரில்,​​ பம்​பாய் உயர் நீதி​மன்​றத்​தின் தலைமை நீதி​பதி எம்.சி.சாக்லா தலை​மை​யில் விசா​ர​ணைக் குழு அமைக்​கப்​பட்​டது.​ அக்​குழு அளித்த அறிக்​கை​யின்​படி காங்​கி​ரஸ் கட்​சி​யின் தேர்​தல் நிதிக்கு முந்த்ரா உத​வி​யி​ருப்​ப​தா​க​வும்,​​ அதன்​பே​ரில்,​​ அவ​ரு​டைய பங்​கு​களை மிக அதி​க​மான விலைக்கு வாங்க நிதி​ய​மைச்​சர் டி.டி.கிருஷ்​ண​மாச்​சாரி உத்​த​ர​வின்​படி இந்​திய ஆயுள் காப்​பீட்டு நிறு​வ​னம் முன்​வந்​த​தும் தெரி​ய​வந்​தது.​ இது,​​ அர​சாங்க அதி​கா​ரத்தை தவ​றா​கப் பயன்​ப​டுத்​திய ஊழல் விவ​கா​ரம் என்று சாக்லா குழு தீர்​மா​னித்​தது.​ அதன் பிறகு,​​ நிதி​ய​மைச்​சர் டி.டி.கிருஷ்​ண​மாச்​சாரி பத​வியி​லி​ருந்து வெளி​யே​றி​னார்.​

1973 ஆகஸ்டு 15-ல் கல்​வி​ய​மைச்​சர் நூருல் ஹாசன் முயற்​சி​யால் சுதந்​திர இந்​தி​யா​வின் முதல் 25 ஆண்​டு​கள் பற்​றிய ஒரு வர​லாற்​றைத் தொகுத்து காலப்​பெட்​ட​கத்​தில் வைத்து தில்லி செங்​கோட்டை அரு​கில் ஆழப் புதைத்​தார்​கள்.​ விஞ்​ஞான முறை​யால் அப்​பெட்​ட​கத்தை ஐயா​யி​ரம் ஆண்​டு​க​ளுக்​குப்​பின் வரு​ப​வர்​க​ளால் தாம் திறந்து பார்க்க முடி​யும் என்று கூறப்​பட்​டது.​ ஆயி​னும்,​​ பெட்​ட​கத்​தில் வைக்​கப்​பட்ட வர​லாற்​றில் பல தவ​றான,​​ தாறு​மா​றான விவ​ரங்​கள் இருப்​ப​தாக ஒரு கேள்வி 1973 நவம்​ப​ரில் மக்​க​ள​வை​யில் வந்​தது.​ அதற்கு,​​ பெட்​ட​கத்​தி​லுள்ள வர​லாறு மிக​வும் ரக​சி​ய​மா​னது,​​ அது ஐயா​யி​ரம் ஆண்​டு​க​ளுக்​குப் பிற​கு​தான் பார்க்​கப்​பட வேண்​டும் என்று கல்​வி​ய​மைச்​சர் பதி​ல​ளித்​தார்.​ ​

ஆ​யி​னும்,​​ 1977 மார்ச்​சில் ​ மொரார்ஜி தேசாய் தலை​மை​யில் ஜனதா அர​சாங்​கம் அமைந்​த​தும்,​​ அந்​தக் காலப்​பெட்​ட​கம் தோண்​டி​யெ​டுக்​கப்​பட்டு,​​ அதி​லி​ருந்த வர​லாற்​றுக் குறிப்​பு​கள் தவ​றா​னவை என்று நிரூ​ப​ண​மா​னது.​ இதில் எனக்​கும் பங்கு உண்டு.​

சி​று​பொறி,​​ பெரும் தீயாக மாறக்​கூ​டும்.​ அதைப்​போல்,​​ ஒரு சிறிய கேள்வி பெரிய வர​லாற்​றுத் திருப்​பத்தை உண்​டாக்​கக்​கூ​டும்.​ ஆக,​​ கேள்வி நேரத்தை எந்த வகை​யி​லும் ஒதுக்கி வைப்​பது அல்​லது அலட்​சி​யம் செய்​வது,​​ நாட்டு மக்​க​ளுக்​கும்,​​ நாடா​ளு​மன்​றத்​துக்​கும் இழைக்​கப்​ப​டும் மாபெ​ரும் துரோ​க​மா​கும்.​
கட்டுரையாளர் : இரா.செழி​யன்
நன்றி : தினமணி

2 comments:

அஹோரி said...

இன்னாபா பேசற நீ ... ஒண்ணுமே பிரில ... கோட்டர், பிரியாணி குடுத்தா ஓட்டு போடுவேன் ... அம்புடுதேன்.

பாரதி said...

அஹோரி வருகைக்கு நன்றி