Thursday, December 4, 2008

நெட்ஒர்க் கிடைப்பதில் சிக்கல்

சில தினங்களாக, ஏர்டெல் மொபைல் போன் நெட்ஒர்க் சரியாகக் கிடைக்காததால், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் தனது டவர்களை நிறுவி, ஏர்டெல் நிறுவனம் தனது நெட்ஒர்க்கை விரிவுபடுத்தியுள்ளது. பெரும்பான்மை மக்கள், ஏர்டெல் நிறுவனத்தின் பிரிபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு இணைப்புகளைப் பெற்றுள்ளனர். சில தினங்களாக, சென்னை, மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஏர்டெல் இணைப்பு பெற்றவர்கள் உள்ளூரிலும், வெளியூர்களுக்கும் பேசும்போது சரியாக நெட்ஒர்க் கிடைக்கவில்லை என்றும், இணைப்பு கிடைத்து பேசத் துவங்கும்போது, இணைப்பு துண்டிக்கப் படுவதாகவும், பேசுபவர்களில் ஒருவர் பேசுவது இன்னொருவருக்கு கிடைக்காமல் இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். சமீபத்தில், மழை பெய்த பின், இப்பிரச்னை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், 'சி.யு.ஜி.,' திட்டத்தின் கீழ் வரும் இணைப்புகளுக்கு இடையில் பேசும்போது பல நேரங்களில் இணைப் பே கிடைப்பதில்லை என்றும், எதிர்முனையில், போனை பயன்படுத்தாத நிலையிலும், 'நெட்ஒர்க் பிசி அல்லது போன் சுவிட்ச் ஆப்' என்று வருவதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து, ஏர்டெல் நிறுவன அதிகாரியிடம் கேட்டபோது, ''இதுபோன்ற புகார்கள் எதுவும் எங்களுக்கு இதுவரை, குறிப்பிட்டு வரவில்லை. சிக்னல் கிடைக்கவில்லை என்று புகார்கள் வரும்போது, அந்த குறிப்பிட்ட பகுதியில் உள்ள டவர்களில் ' பூஸ்டர்கள்' அமைத்து சரி செய்துவிடுவோம். ''தற்போதுள்ள சூழலில் நெட்ஒர்க்கிலோ, டவர்களிலோ எந்த பிரச்னையும் இல்லை. இது போன்ற நெட்ஒர்க் பிரச்னைகளுக்காக வரும் புகார்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்படுகின்றன,'' என்றார்.
நன்றி : தினமலர்