Wednesday, August 27, 2008

டெய்ச்சி - ரான்பாக்ஸி ஒப்பந்தத்திற்கு எஃப் ஐ பி பி ஒப்புதல்

இந்தியாவின் பிரபல பார்மாசூடிகல் கம்பெனியான ரான்பாக்ஸியின் 20 சதவீத பங்குகளை கூடுதலாக வாங்க ஜப்பானின் டெய்ச்சி சான்கியோ முன்வந்தது. இதற்காக வெளிநாட்டு பணம் ரூ.21,560 கோடி இந்தியாவுக்குள் வர இருப்பதால், அதற்கு ஃபாரின் இன்வெஸ்ட்மென்ட் புரமோஷன் போர்டிடம் ( எஃப்.ஐ.பி.பி.,) அனுமதி பெற வேண்டும். இந்த ஒப்பந்தத்திற்கு இப்போது எஃப்.ஐ.பி.பி., அனுமதி அளித்து விட்டது. மேலும் இப்போது இந்த விவகாரம் மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரத்துறையினரின் ஒப்பந்தத்திற்காக சென்றிருக்கிறது. ஏனென்றால் ரூ.600 கோடிக்கும் மேல் வெளிநாட்டு பணம் இங்கு வருகிறது என்றால் அவர்களின் ஒப்புதலை பெற வேண்டும். இவர்களது ஒப்புதல் எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை என்றாலும், ரான்பாக்ஸியின் 20 சதவீத பங்குகளை வாங்குவதற்கான ஓப்பன் ஆஃபர் ஆகஸ்ட் 16ம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் 4ம் தேதி முடிகிறது. மத்திய அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் நாங்கள் பங்குகளை வாங்கும் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம் என்று டெய்ச்சி நிறுவன உயர் அதிகாரிகம் தெரிவித்தரனர்.
நன்றி : தினமலர்


No comments: