Tuesday, July 22, 2008

தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் பங்கு சந்தை


மத்திய அரசின் மீது கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு இன்று நடக்க இருப்பது எல்லாம் பங்கு சந்தையை பாதித்ததாக தெரியவில்லை. பெரும்பாலான முதலீட்டாளர்கள் யு.பி.ஏ., அரசு ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றுவிடும் என்று நம்பியதால், மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்தே உயர துவங்கிய சென்செக்ஸ் மாலை வரை தொடர்ந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 254.16 புள்ளிகள் ( 1.84 சதவீதம் ) உயர்ந்து 14,104.20 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 80.60 புள்ளிகள் ( 1.94 சதவீதம் ) உயர்ந்து 4,240.10 புள்ளிகளில் முடிந்தது. சி.என்.பி.சி.- டி.வி.18 எடுத்த கணிப்பின்படி, யு.பி.ஏ., அரசுக்கு ஆதரவாக 268 ஓட்டுகளும் எதிராக 267 ஓட்டுகளும் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. இன்றைய பங்கு வர்த்தகத்தில் பெரிதும் பயன் அடைந்தது செய்ல், பெல், ஐடிசி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், விப்ரோ, ஸ்டேட் பேங்க் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனங்கள்.

நன்றி : தினமலர்


No comments: