Thursday, August 28, 2008

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது

அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடாவை நோக்கி குஸ்டவ் என்ற புயல் நகர்ந்து வருவதை அடுத்து நேற்று நியுயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது. ஏனென்றால் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் தான் பெரும்பாலான அமெரிக்க எண்ணெய் கம்பெனிகளின் எண்ணெய் கிணறுகள் இருக்கின்றன. இதனால் நேற்று நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட்ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 1.88 டாலர் உயர்ந்து 118.15 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை 1.59 டாலர் உயர்ந்து 116.22 டாலராக இருந்தது. மெக்ஸிகோ வளைகுடா பகுதியை புயல் தாக்கும் அபாயம் இருப்பதால் அங்கிருக்கும் பிரபல எண்ணெய் நிறுவனமான ராயல் டச் ஷெல், அதன் ஊழியர்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டது. 2005 ம் ஆண்டு அந்த பகுதியை தாக்கிய கட்ரினா மற்றும் ரீடா புயல்கள் தாக்கியதற்கு பின் இப்போதுதான் மிகப் பெரிய குஸ்டவ் புயல் அந்த பகுதியை தாக்க வருவதாக சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்


No comments: