Wednesday, July 23, 2008

சிமென்ட் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா சிமென்ட்ஸ் ரூ.2,100 கோடி முதலீடு


இந்தியா சிமென்ட்ஸ் லிமிடெட், அதன் சிமென்ட் உற்பத்தியை வருடத்திற்கு 14 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயர்த்த ரூ.2,100 கோடி முதலீடு செய்கிறது. இதனை அதன் இணை தலைவர் - மார்க்கெட்டிங், ராகேஷ் சிங் தெரிவித்தார். இப்போது இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கு ஆந்திராவில் 4 தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டில் 3 தொழிற்சாலைகளும் இருக்கின்றன. இதன் மூலம் வருடத்திற்கு 9 மில்லியன் மெட்ரிக் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனை 14 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயர்த்த திட்டமிட்டு ரூ.2,100 கோடி முதலீடு செய்கிறார்கள். இப்போது அவர்களுக்கு தென் இந்தியா மற்றும் மகாராஷ்டிராவில் 8,000 ஸ்டாக்கிஸ்டுகள் இருக்கிறார்கள். இதில் 30 லிருந்து 35 சதவீதத்தினர் சங்கர் மற்றும் கோரமண்டல் சிமென்ட்டின் பிரத்யேக ஸ்டாக்கிஸ்ட்டாக இருக்கிறார்கள். இந்தியா சிமென்ட்டின் விற்பனையில் ஆறு முதல் ஏழு சதவீதம் வரை, மொத்தமாக வாங்கிக்கொள்பவர்களுக்கும் பெரிய பில்டர்ஸ்களுக்குமே விற்கப்படுகிறது. இவைகள் பெரிய சைஸ் டேங்கர்கள் மூலமாக சப்ளை செய்யப்பட்டு விடுகிறது. மீதிதான் 50 கிலோ கொண்ட பைகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.


நன்றி : தினமலர்


No comments: