Wednesday, July 23, 2008

நம்பிக்கை வாக்கெடுப்பில் யு.பி.ஏ., அரசு வெற்றி : பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம்


யு.பி.ஏ., அரசு மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் யு.பி.ஏ., அரசு வெற்றி பெற்றது ( ஆதரவு - 275, எதிர்ப்பு - 256 ), அமெரிக்க பங்கு சந்தையில் நிலவும் ஏற்ற நிலை, கச்சா எண்ணெய் விலை குறைந்தது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மும்பை பங்கு சந்தையில் காலை வர்த்தகம் ஆரம்பித்த ஒரு நிமிடத்திலேயே சென்செக்ஸ் 651.48 புள்ளிகளும், தேசிய பங்கு சந்தையில் நிப்டி 196.75 புள்ளிகளும் உயர்ந்திருந்தன. பேங்கிங், ரியல் எஸ்டேட், கேப்பிட்டல் குட்ஸ், பவர் போன்ற துறைகளின் பங்குகள் உயர்ந்திருந்தன. அதிகம் பயன் அடைந்தது ஐ சி ஐ சி ஐ வங்கி, ஹெச் டி எஃப் சி வங்கி, ரிலையன்ஸ் இன்ஃப்ரா, யுனிடெக் மற்றும் டி எல் எஃப் நிறுவனங்கள் தான். ஆசிய சந்தைகளான ஹேங்செங், நிக்கி, ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ், கோஸ்பி, தைவான் வெயிட்டட் போன்றவைகள் 1.5 - 3.5 சதவீதம் உயர்ந்திருந்தன. அமெரிக்க சந்தைகளான டௌஜோன்ஸ், நாஸ்டாக் போன்றவையும் உயர்ந்திருந்தது.


நன்றி : தினமலர்


No comments: