Wednesday, July 23, 2008

இன்சூரன்ஸ் பிரிமியம் மொபைலில் கட்டலாம் - தனியார் போட்டி அதிகரிப்பு



இன்சூரன்ஸ் பாலிசியின் பிரிமியத் தொகையை, மொபைல் போன் மூலம் கட்டும் வசதி இப்போது அமலுக்கு வந்துள்ளது; இதனால், தாமதமாக கட்டுவோர் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இன்சூரன்ஸ் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் போட்டா போட்டி அதிகரித்துள்ளதால், வர்த்தகத்தை பெருக்க வாடிக்கையாளர்களுக்கு பல வசதியை ஏற்படுத்த, நிறுவனங்கள் தீவிரமாக உள்ளன.இந்த வகையில், வாடிக்கையாளர்கள், தங்கள் பாலிசியின் பிரிமியத்தை கடைசி தேதிக்குள் கட்டுவதற்கு வசதியாக புதிய வசதியை ஐ.சி.ஐ.சி.ஐ., ப்ருடென்ஷியல் உட்பட சில நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன. அது தான், மொபைல் போன் மூலம் பணத்தை செலுத்தும் வசதி.இன்சூரன்ஸ் துறையில் அதிக வர்த்தகத்தை கொண்டுள்ள நிறுவனம் அரசுக்கு சொந்தமான எல்.ஐ.சி., தான். தனியார் நிறுவனங்கள் போட்டா போட்டி அதி கரித்து வந்தாலும், எல்.ஐ.சி., அளவுக்கு இன்னும் வர்த்தகம் அதிகரிக்க வில்லை. ஆனால், எல்.ஐ.சி., உட்பட அரசு நிறுவனங்களை விட, பல மடங்கு வசதிகளை வாடிக்கை யாளர் களுக்கு தனியார் நிறுவனங்கள் செய்து வருகின்றன. மொபைல் போன் மூலம் செலுத்தும் வசதியை சமீபத்தில் ஆரம்பித்த ஐ.சி.ஐ.சி.ஐ., துணைத் தலைவர் அனிதா பால் கூறுகையில், 'வாடிக்கை யாளர்களுக்கு பிரிமியம் செலுத்த எல்லா வகையிலும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். அப்போது தான் தாமதம் குறையும். அதனால், மொபைல் போன் மூலம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம். விரைவில் இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்' என்றார்.மொபைல் போன் மூலம் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ள இன்னொரு தனியார் நிறுவனம் மாக்ஸ் நியூயார்க் லைப் இன்சூரன்ஸ். கார்ப்பரேஷன் வங்கி டெபிட் கார்டு மூலம் இந்நிறுவன இன்சூரன்ஸ் தொகையை கட்டலாம். அதற்கான வசதி, மொபைல் போனில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.பஜாஜ் அலியன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனம், மொபைல் போன் மூலம் செலுத் தும் வசதியை ஏற்படுத்த பரிசீலித்து வருகிறது. பணம், செக் மூலம் மட்டுமின்றி, கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் வசதியை இந்த நிறுவனம் அமல்படுத்தியுள்ளது. இதன் தலைமை அதிகாரி மெஹ்ரோத்ரா கூறுகையில்,' எல்.ஐ.சி., போன்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், ஆண்டுதோறும் 10 சதவீதம் அளவுக்கு தான் புதிய வர்த்தகம் செய்கின்றன. 90 சதவீத வர்த்தகம் ஏற்கனவே உள்ள பாலிசிக்களின் புதுப்பித்தலால் நடக்கிறது. அதனால், சிறிய நிறுவனங்கள், வர்த்தகத்தை பெருக்க, வாடிக்கையாளர்களை பல வகையில் ஈர்க்க வேண்டியுள்ளது' என்றார்.டாடா ஏ.ஐ.ஜி., ஆயுள் காப்பீட்டு நிறுவனம், மத்திய அரசின் தபால் துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, 5,000 தபால் நிலையங்களில் எங்கு வேண்டுமானாலும் பிரிமியத்தை செலுத்தலாம். இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பாலிசி எடுத்தவர்களில் தாமதமாக பணம் செலுத்துவோர் எண்ணிக்கை ஆண்டு க்கு 25 சதவீதமாக உள்ளது. இதைக் குறைத்தால் தான் வர்த்தகத்தை பெருக்க முடியும் என்று நம்பு வதால் மொபைல் போன் மூலம் பணம் செலுத்தும் வசதியை பல நிறுவனங்கள் ஏற்படுத்தி வரு கின்றன.மொபைல் போனில் இன்டர்நெட் வசதி உள்ளவர்கள் மட்டும் தான் இந்த வசதியை பயன்படுத்த முடியும் என்பதால், இப்போதைக்கு இதற்கு வரவேற்பு சுமாராகத்தான் உள்ளது.




நன்றி : தினமலர்


No comments: