Sunday, December 28, 2008

வேலை பறிப்பு இருக்காது-சம்பள உயர்வும் இருக்காது

இந்தியாவில் சாப்ட்வேர் உட்பட எக்கச்சக்க சம்பளம் தந்து வந்த பல்வேறு தனியார் நிறு வனங்களில், நிதி நெருக்கடி காரணமாக, வேலை நீக்கம் இருக் காது; ஆனால், அடுத்த ஆண்டு சம்பள உயர்வு முடக்கப்படும்! சர்வதேச நிதி நெருக்கடியால், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என்று பலதுறை நிறுவனங்கள் தவிக்கின்றன.
இதனால், இந்த நிறுவனங்களின் பணிகளை செய்து வரும் இந்திய சாப்ட்வேர் உட்பட பல் வேறு நிறுவனங்களுக்கு வரு வாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பல சாப்ட்வேர் நிறுவனங் களுக்கு, வெளிநாட்டு நிறுவனங் கள் அளித்துவந்த 'ப்ராஜக்ட்'கள் பறிபோய் வருகின்றன; அதுபோல, பல கால் சென்டர் களுக்கு பணிகளை வெளிநாட்டு நிறுவனங்கள் முடக்கி வைத் துள்ளன.
இதனால், இந்திய நிறுவனங் களில் ஆட்குறைப்பு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட் டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களில் ஆட்குறைப்பு அதிக அளவில் நடந்து வருகிறது. ஆனால், இந்திய நிறுவனங்களில் இந்த அளவுக்கு ஆட்குறைப்பு இல்லை. ஆனால், சம்பள உயர்வை குறைக்கவோ, முடக்கி வைக் கவோ முடிவு செய்ய பல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக, சர்வதேச சர்வே நிறுவனம்,'மெர்சர்' சமீபத்தில் சர்வே நடத்தியது. அதில் தெரியவந்த தகவல்கள்: இந்திய நிறுவனங்களில் ஐந்தில் ஒரு கம்பெனி வீதம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் நடுத்தர அளவில் வர்த்தகம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் ஊழியர் களை வேலையில் இருந்து நீக்கும் நடவடிக்கையை எடுக்க தயா ரில்லை. ஆனால், அடுத்தாண்டுக் கான சம்பள உயர்வை நிறுத்தி வைக்க திட்டமிட்டுள்ளன. வெளிநாட்டு உதவியுடன் நடக்கும் பல நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த நிறுவனங்களில் தான் ஆட்குறைப்பு இருக்கலாம்; ஆனால், அங்கும் முடிந்த அளவுக்கு ஊழியர்களை தக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.
இந்தியாவில் 80 சதவீத சாப்ட்வேர் நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களின் ப்ராஜக்ட்கள் வராததால், இந்த நிறுவனங்கள் வருவாய் குறைந் துள்ளது.
முன்னணி நிறுவனங்களில் 83 சதவீத நிறுவனங்கள், தங்கள் வருவாய் இந்தாண்டு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாகவே இருக்கும் என்று நினைக்கின்றன.
திறமைக்குறைவான ஊழியர் களை தக்க வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவர்களுக்கு வேறு பணிகள் அளிக்கப்படலாம். அப்படியும் முடியாதவர்களை மட்டும் வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்படுகிறது. இவ்வாறு சர்வேயில் தெரியவந்துள்ளது.
நன்றி : தினமலர்


No comments: