Friday, December 26, 2008

மும்பை நட்சத்திர ஓட்டல்களில் குறைந்து போன 'புக்கிங்'

பயங்கரவாதிகளின் தாக்குதல் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால், மும்பை நட்சத்திர ஓட்டல்களில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் எண் ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாக ஓட்டல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வந்தது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையும் வரலாறு காணாத அள விற்கு உயர்ந்ததால், அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடு கிடுவென உயர்ந்தது. இதன் காரணமாக, மக்களின் வாழ்க்கைத் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி, மும் பையில், பாக்., பயங்கரவாதிகள், பல நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில், 180க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து, நட்சத்திர ஓட் டல்கள் மூடப்பட்டு, கடந்த 21ம் தேதியன்று மீண்டும் திறக்கப்பட் டன. இந்நிலையில், நட்சத்திர ஓட் டல்களில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கிறிஸ்துமஸ் மற் றும் புத்தாண்டு கொண்டாட் டங்களின் எண்ணிக்கை பெருமளவிற்கு குறைந்துவிட்டதாக ஓட்டல் சங்க செயலர் கோர்தே தெரிவித்துள்ளார். மும்பையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பின்னர், மும்பை நட்சத் திர ஓட்டல்களில் 30 முதல் 40 சதவீதத்துக்கு 'புக்கிங்' குறைந்துவிட்டது. இதன் காரணமாக, ஓட்டலில் பல அறைகள் காலியாக உள்ளன. அதிகமான ஆடம்பர ஓட்டல் களைக் கொண்டுள்ள கோவாவிலும், இதே நிலை தான் காணப் படுகிறது. தாஜ் ஓட்டலில் மொத்தமுள்ள 268 அறைகளில் 150 அறைகள் பழுது பார்க்கப்பட்டன. இருப் பினும், 56 சதவீத அறைகளே 'புக்கிங்' செய்யப்பட்டன. இவ் வாறு கோர்தே கூறினார். மொத்தம் 550 அறைகளைக் கொண்ட டிரைடென்ட் ஓட்டலில் 16 சதவீத அறைகளே நிரம்பியுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, 95 அறைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது என, அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். கடற்கரை அருகில் கட்டப் பட்டுள்ள ஓட்டல்களிலும் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட் டங்களை முன்னிட்டு நடைபெறும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் போன்றவை குறைந்த அளவிலேயே இருக் கும் என, ரிட்ஸ் ஓட்டல் பொதுமேலாளர் ஆனந்த் பட் கூறினார். மும்பை சம்பவத்தை தொடர்ந்து, இந்தியர் தரப்பில் 50 முதல் 60 சதவீத புக்கிங்கும், வெளிநாட்டவர் தரப்பில் 30 சதவீத புக்கிங்குகளும் குறைந்துவிட்டதாக அவர் கூறினார். புத்தாண்டு கொண்டாட்டங் கள் மட்டுமின்றி, ஓட்டல் வாடகையும் பெருமளவில் குறைந்து போய்விட்டதாகவும், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப் பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையும், குறைந்து விட்டதாகவும், இந்திய டிராவல் ஏஜென்ட்கள் சங்க நிர்வாக கமிட்டியின் கவுரவ பொருளாளர் இக்பால் முல்லா கூறினார். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உட்பட்ட மும்பை நட்சத் திர ஓட்டல்கள், தங்களது பழைய நிலையை எட்டுவதற்கு குறைந்தபட்சம் ஆறு முதல் எட்டு மாதங்களாகும் என, ஓட் டல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி : தினமலர்


No comments: