Friday, December 26, 2008

தொடர்ந்து சரிந்து வரும் பங்கு சந்தை

தொடர்ந்து நான்காவது நாளாக பங்கு சந்தை சரிந்துள்ளது. இன்று நிப்டி 2900 புள்ளிகளுக்கு கீழேயும், சென்செக்ஸ் 9500 புள்ளிகளுக்கு கீழேயும் சென்று முடிந்திருக்கிறது. இன்று வர்த்தகம் துவங்கி சுமார் 3 மணி நேரம் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ் மற்றும் நிப்டி, மதியத்திற்கு மேல் குறைய துவங்கியது. மதியத்திற்கு மேல் சந்தை சரிந்ததற்கு இரண்டு காரணங்கள் சொல்கிறார்கள். அட்வான்ஸ் டாக்ஸ் வசூல் குறைந்திருக்கிறது என்று வந்த செய்தியாலும் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூழும் என்ற அபாயம் இருப்பதாலும் சந்தை சரிந்து விட்டது என்கிறார்கள். மூன்றாவது காலாண்டில் அட்வான்ஸ் டாக்ஸ் வசூல் 22.4 சதவீதம் குறைந்திருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூழும் என்ற அபாயமும் இன்று அதிகரித்திருக்கிறது. இந்திய முப்படை தளபதிகள் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஆலோசனை செய்திருக்கிறார்கள்.இதெல்லாம் பங்கு சந்தையை மதியத்திற்கு மேல் அதிகம் பாதித்திருக்கிறது. ஆயில், பேங்கிங், கேப்பிடல் குட்ஸ், மெட்டல், டெக்னாலஜி, பவர் மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகள் இறங்கி இருந்தன. ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், இன்போசிஸ் டெக்னாலஜிஸ், எஸ்.பி.ஐ, ஐசிஐசிஐ பேங்க், பெல், எல் அண்ட் டி, செய்ல், விப்ரோ, ரிலையன்ஸ் இன்ஃப்ரா, டி.எல்.எஃப்., ஆகியவை பெரும் நஷ்டமடைந்தன. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 239.80 புள்ளிகள் ( 2.51 சதவீதம் ) குறைந்து 9,328.92 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 59.60 புள்ளிகள் ( 2.05 சதவீதம் ) குறைந்து 2,857.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: