Monday, December 29, 2008

பங்கு சந்தை சரிவால் 10 பிரபல நிறுவனங்கள் ஒரு வாரத்தில் இழந்தது ரூ.61,000 கோடி

இந்திய பங்கு சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட சரிவால், 10 பிரபல நிறுவனங்கள் ரூ.61,000 கோடி வரை சந்தை மூலதனத்தை இழந்திருக்கின்றன. 6 பொதுத்துறை நிறுவனங்களும் 4 தனியார் நிறுவனங்களும் மொத்தமாக போன வாரத்தில் இழந்த சந்தை மூலதனம் ரூ. 60,872 கோடி. இந்தியாவின் மதிப்புமிக்க கம்பெனி என்று பெயர் பெற்றுள்ள ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் சந்தை மூலதனம் மட்டும் ரூ.21,600 கோடி குறைந்து ரூ.2,00,000 கோடிக்கும் கீழே சென்று விட்டது. கடந்த வெள்ளி அன்று முடிந்த பங்கு சந்தையுடன் கணக்கிட்டால், இந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் என்று சொல்லப்படும் நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.11,02,154 கோடியில் இருந்து ரூ.10,41,283 கோடியாக குறைந்திருக்கிறது.முகேஷ் அம்பானியின் நிறுவன மதிப்பு ரூ. 2,12,345 கோடியில் இருந்து ரூ.1,90,745 கோடியாக குறைந்திருக்கிறது.இந்த சரிவிலிருந்து தப்பியது பொதுத்துறை நிறுவனமான எம்.எம்.டி.சி., என்ற சுரங்க நிறுவனம் மட்டுமே. அதன் சந்தை மூலதனம் ரூ.8,278 கோடி உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: