Monday, December 29, 2008

ஏற்றத்துடன் முடிந்த பங்கு சந்தை

கடந்த ஒரு வாரமாக சரிந்திருந்த பங்கு சந்தை இன்று ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. பேங்கிங் இன்டக்ஸ் 4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மெட்டல், ஆயில் அண்ட் கேஸ், பவர் மற்றும் கேப்பிடல் குட்ஸ் பங்குகள் பெருமளவில் வாங்கப்பட்டன. மிட்கேப் 1.58 சதவீதமும் ஸ்மால் கேப் 0.78 சதவீதமும் உயர்ந்திருந்தது. மும்பை பங்கு சந்தையில் இன்று சென்செக்ஸ் 64.95 புள்ளிகள் ( 2.27 சதவீதம் ) உயர்ந்து 2,922.20 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 204.60 புள்ளிகள் ( 2.19 சதவீதம் ) உயர்ந்து 9,533.52 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் சத்யம் பங்குகளின் மதிப்பு 9.41 சதவீதம், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 7.26 சதவீதம், ரான்பாக்ஸி லேப் 7.03 சதவீதம், ஐசிஐசிஐ பேங்க் 6.35 சதவீதம், கிராசிம் 5.02 சதவீதம் உயர்ந்திருந்தது. ஆனால் டாடா மோட்டார்ஸ் 4.37 சதவீதம், மகிந்திரா அண்ட் மகிந்திரா 3.67 சதவீதம், மாருதி சுசுகி 2.32 சதவீதம் குறைந்திருந்தது. இன்று ஆசிய பங்கு சந்தைகள் கலந்து முடிந்திருந்தாலும், ஐரோப்பிய சந்தை ஏற்றத்துடன்தான் முடிந்திருக்கிறது.

No comments: