Thursday, December 18, 2008

சரிந்தது பங்கு சந்தை

இன்றைய பங்கு வர்த்தகத்தில் மெட்டல், டெலிகாம்,பவர், கேப்பிடல் குட்ஸ்,ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் போன்ற நிறுவன பங்குகள் இன்று பெருமளவில் விற்கப்பட்டதாலும், சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பங்குகள் வேகமாக குறைந்து போனதாலும் சென்செக்ஸ் சரிந்து விட்டது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகளில் ஏற்பட்ட சரிவும் இந்திய பங்கு சந்தையை பாதித்தது எனலாம். மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் ஆரம்பித்திருந்தாலும், மதியத்திற்கு மேல் சரிய துவங்கி விட்டது. ஐரோப்பிய, அமெரிக்க பங்கு சந்தைகளின் வீழ்ச்சிதான் அதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. சென்செக்ஸ் 9,682.91 புள்ளிகள் வரை இறங்கி வந்தாலும் வர்த்தக முடிவில் 261.69 புள்ளிகள் ( 2.62 சதவீதம் ) குறைந்து 9,715.29 புள்ளிகளில் முடிந்திருந்தது. நிப்டி 2,943.50 புள்ளிகள் வரை இறங்கி இருந்தாலும் வர்த்தக முடிவில் 87.40 புள்ளிகள் ( 2.87 சதவீதம் ) குறைந்து 2,954.35 புள்ளிகளில் முடிந்திருந்தது.தொடர்ந்து ஐந்து வர்த்தக நாட்களாக அசையாமல் இருந்த மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் இன்று ஆட்டம் க்ண்டு விட்டது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், சத்யம், பெல், எஸ்.பி.ஐ., எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்ஃரா ஆகிய நிறுவனங்கள் அதிகம் பாதிப்படைந்திருந்தன. இன்று அதிகம் பாதிக்கப்பட்டது சத்யம் கம்ப்யூட்டர்ஸ்தான். 30.22 சதவீத மதிப்பை அது இழந்திருந்தது. இருந்தாலும் ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், ஓ.என்.ஜி.சி.,ஹெச்.யு.எல், ஹெச்.டி.எப்.சி.பேங்க், கிராசிம், விப்ரோ பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன.
நன்றி : தினமலர்


No comments: