Tuesday, December 23, 2008

பொது தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பொதுத்தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படலாம் என, பெட்ரோலிய அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:தேர்தல் அறிவிப்பு
களுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைக் குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம். இப்போது விலையைக் குறைத்தால், கச்சா எண்ணெய் விலை கூடும் போது மீண்டும் விலையைக் கூட்ட முடியாது என்பதால், தற்போதைக்கு விலைக் குறைப்புக்கு வாய்ப்பு இல்லை.இவ்வாறு உயரதிகாரி கூறினார்.
இம்மாத முற்பகுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாயும் குறைக்கப்பட்டன. இதன் பின்னும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு 9.98 ரூபாயும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு 1.03 ரூபாயும் லாபம் ஈட்டி வருகின்றன. கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தால், இந்த லாபம் 11.48 ரூபாய் மற்றும் 2.92 ரூபாயாக உயரும்.இருந்தாலும், கெரசின் விற்பனையில் லிட்டருக்கு 17.26 ரூபாயும், சமையல் காஸ் விற்பனையில் சிலிண்டர் ஒன்றுக்கு 148.38 ரூபாயும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
நன்றி : தினமலர்


No comments: