Tuesday, November 3, 2009

100 சிசி பைக் உற்பத்தி அதிகரிக்க பஜாஜ் முடிவு

இந்தியாவில், என்ட்ரி லெவல் பைக் என்றால், 100 சிசி பைக்கை தான் குறிப்பிடும். இந்த வகை பைக் விற்பனையில் முதல் இடத்தில் இருப்பது ஹீரோ ஹோண்டா நிறுவனம் தான். சில ஆண்டுகள் வரை, இந்த வகை பைக் விற்பனையில் அக்கறை காட்டாது இருந்த, பஜாஜ் ஆட்டோ நிறுவனம், கடந்த ஜூலை மாதம், 100 சிசி திறன் கொண்ட டிஸ்கவர் டி.டி.எஸ்., எஸ்.ஐ., பைக்கை அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.40 ஆயிரம் என்றும் அறிவிக்கப்பட்டது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம்

எதிர்பார்க்காத அளவுக்கு, இந்தியாவில் 100 சிசி பைக் விற்பனை ஜூலை செப்டம்பர் காலத்தில் 38.90 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, தனது 100 சிசி பைக் உற்பத்தியை அதிகரிக்க செய்ய, முடிவு செய்துள்ளது. தற்போது மாதத்துக்கு 85 ஆயிரம் பைக்குகள் என்ற அளவுக்கு உற்பத்தி அதிகரிக்க செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துக்கு மூன்று தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில், மாதத்துக்கு 2.6 லட்சம் பைக்குகளை உற்பத்தி செய்யப்படும். அடுத்த சில மாதங்களில் 100 சிசி பைக் சந்தையில் காணப்படும் நிலவரத்தை கருத்தில் கொண்டு உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடிவு செய்யலாம் என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டம் தீட்டியுள்ளது.
நன்றி : தினமலர்

No comments: