Wednesday, August 19, 2009

சிறிய அளவு இணைப்புகளுக்கும், கைப்பற்றுதலுக்கும் கோர்ட் அனுமதி தேவையில்லை : விரைவில் அமல்

கம்பெனிகள் ஏற்படுத்தும் சிறிய அளவு இணைப்புகளுக்கும், கைபற்றுதலுக்கும் ஐகோர்ட் அனுமதி தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. ஒருமித்த கருத்தோடு எந்த ஒரு போட்டியும், பங்குதாரர்களின் ஆட்சேபனையும் இல்லாதபட்சத்தில் , கம்பெனிகள் ஒருங்கிணைவதற்கும், கைப்பற்றுதலுக்கும் ஐகோர்ட் அனுமதி பெற தேவையில்லை என்ற திட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது. மெர்ஜர்களுக்கு கோர்ட் அனுமதி பெற வேண்டிய நிலை நீடிப்பதால், சிறிய மெர்ஜர்களுக்கு 3ல் இருந்து 5 மாத காலமும், பெரிய மெர்ஜர்களுக்கு ஒரு வருடத்துக்கு மேலும் கால தாமதமாகிறது. இதை தவிர்ப்பதற்காக , மெர்ஜர் விவகாரங்களை கண்காணிக்க ஐகோர்ட்டுக்கு பதிலாக , வேறு ஒரு அமைப்பை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சுதந்திரமாக இயங்கக் கூடிய ஒரு ஆணையத்தை ஏற்படுத்தி அவற்றிற்கு மெர்ஜர்களை க்ளியர் செய்யும் அதிகாரத்தையும் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் காம்படிசன் கமிஷன் ஆப் இந்தியா தான் இணைப்புகளுக்கும், கைபற்றுதலுக்கும் பச்சை கொடி காட்டும் பொறுப்பபை தொடர்ந்து வகிக்கும் என தெரிகிறது.
நன்றி : தினமலர்


No comments: