Wednesday, August 19, 2009

தாளடி பருவத்தில் அரிசி உற்பத்தி 10 மில்லியன் டன் குறையும் : சரத் பவார்

டில்லியில் அனைத்து மாநிலங்களின் உணவு துறை அமைச்சர்களுடன் சரத் பவார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய மத்திய வேளாண் மற்றும் உணவு துறை அமைச்சர் சரத் பவார் தென்மேற்கு பருவமழை பொய்த்ததன் காரணமாக நடப்பு ஆண்டில் தாளடி பருவத்தில் அரிசி உற்பத்தி 10மில்லியன் டன் வரை குறையும் என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நெல் பயிரிடப்பட்ட மொத்த பரப்பளவை விட இந்த ஆண்கடு 5.7 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு கம்மியாக பயிரிடப்படும் என்றும் இதன் விளைவாக மொத்த உற்பத்தியில், பத்து மில்லியன் டன் குறைவாக இருக்கும் என்றும் பவார் தெரிவித்துள்ளார். 2008-2009 ஆண்டில் 100 மில்லியன் டன் அரிசி சாகுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அரிசி சாகுபடி தவிர கரும்பு விவசாயம் மற்றும் எண்ணெய் விதை விவசாயத்திலும் சரிவு இருக்கும் என கவலை தெரிவித்தார். நாட்டின் மொத்த மழை அளவும் 29 சதவீதம் குறைந்திருப்பதாக பவார் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


No comments: