Wednesday, November 12, 2008

இன்றும் சரிவில் முடிந்த பங்கு சந்தை

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பங்கு சந்தை சரிவில் முடிந்திருக்கிறது. இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே சரிந்து கொண்டிருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 303.36 புள்ளிகள் குறைந்து 9,536.33 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 90.20 புள்ளிகள் குறைந்து 2,848.45 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. நேற்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று ரியல் எஸ்டேட், பேங்கிங், மெட்டல், கேப்பிடல் குட்ஸ், ஆயில் அண்ட் கேஸ் மற்றும் பவர் பங்குகள் பெருமளவில் விற்கப்பட்டன. பிஎஸ்ஸி யின் ரியால்டி இன்டக்ஸ் 7.34 சதவீதமும், பேங்க் இன்டக்ஸ் 4.38 சதவீதமும், மெட்டல் இன்டக்ஸ் 3.67 சதவீதம், கேப்பிடல் குட்ஸ் 3.63 சதவீதமும் குறைந்திருந்தன.
நன்றி : தினமலர்

No comments: