Monday, July 21, 2008

யு.பி.ஏ.அரசு நீடிக்கவே பெரும்பாலான இந்திய சி.இ.ஓ.,க்கள் விரும்புகிறார்கள் : சர்வே


மும்பை : இப்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ., அரசு நீடிக்கவே இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள் ( சி.இ.ஓ.,) விரும்புகிறார்கள் என்று, இன்று எடுத்த ஒரு சர்வேயில் தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியை இதுவரை ஆதரித்து வந்த இடதுசாரி கட்சிகள், அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டதை அடுத்து, அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நாளை நடக்கிறது. இந்நிலையில் அசோசியேட்டட் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்டு இன்டஸ்டிரீஸ் ( அசோசெம் ) என்ற அமைப்பு இன்று திங்கட்கிழமை, இந்திய தொழில் நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாக பணியாற்றும் சி.இ.ஓ.,க்களிடம் நடத்திய ஒரு சர்வேயில், இப்போது ஆளும் காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ., அரசுதான் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தது தெரிய வந்துள்ளது. 400 சி.இ.ஓ.,க்களிடம் எடுத்த கருத்து கணிப்பில் 72 சதவீதத்தினர் காங்கிரஸ் தலைமையிலான அரசுதான் நீடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்று, அவர்கள் ( காங்கிரஸ் ), பென்சன், இன்சூரன்ஸ், சிவில் ஏவியேஷன், தொழிலாளர் முன்னேற்றம் போன்ற துறைகளில் இன்னும் வேகமான முன்னேற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கின்றனர். இந்தியா அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், இன்னும் 15 வருடங்களில் அணுசக்தி துறை சம்பந்தமான தொழில்களில் சுமார் 40 பில்லியன் டாலர் ( சுமார் 1,70,000 கோடி ரூபாய் ) மதிப்புள்ள முதலீடு இந்தியாவுக்கு வரும் என்றும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஏனென்றால் அது சம்பந்தமான பேச்சுவார்த்தையை ஏற்கனவே இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடம் நடத்தி வைத்திருக்கின்றன என்றனர்.

நன்றி : தினமலர்

2 comments:

Unknown said...

test

கோவை விஜய் said...

உங்கள் கூற்று உண்மையாய் விட்டதே!

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/