Monday, July 21, 2008

மாதங்களில் பணவீக்கம் குறையும் ரிசர்வ் வங்கி கவர்னர் நம்பிக்கை


புதுடில்லி: 'இன்னும் ஆறு மாதங்களில் பணவீக்கம் 5.5 சதவீதமாக குறையும். இதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப் பட்டுள்ளன' என ரிசர்வ் வங்கி உறுதி அளித்துள்ளது. நாட்டின் பணவீக்க அளவு, இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர் ரெட்டி, பார்லிமென்ட் நிலைக் குழுவுடன் சமீபத்தில் விவாதித்தார். அப்போது அவர் பேசியதாவது: பணவீக்கத்தை கட்டுப்படுத்த அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் ஆறு மாதங்களுக்குள், பணவீக்கம் 5.5 சதவீதமாக குறைக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, நமது நாட்டின் பொருளாதார நிலை சிறப்பாகவே உள்ளது. உலகம் முழுவதும் தற்போது பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. இந்த சூழ்நிலையில், வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகள் மற்றும், ஜப்பானில் உள்ள பொருளாதார வளர்ச்சியை நமது நாட்டு வளர்ச்சியோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது. இவ்வாறு ரெட்டி கூறினார். கவர்னர் ரெட்டி தனது பேச்சின் போது, வங்கிகளின் வட்டி வீதத்தை மேலும் அதிகரிப்பது பற்றியோ, தற்போதுள்ள நிலையில் எப்போது மாற்றம் ஏற்படும் என்பது பற்றியோ தெளிவாக கூறவில்லை.


நன்றி : தினமலர்


1 comment:

கோவை விஜய் said...

பத்திரிக்கை களில் வரும் பணவீக்க விகிதத்தில் கனக்கில் ஏதாவ்து?

உண்மையான கணக்கு வேறு என்பதில் உண்மையிருக்கா?

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/