Monday, July 21, 2008

ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சிறிது உயர்ந்தது


சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் இன்று காலை கச்சா எண்ணெய் விலை சிறிது உயர்ந்திருக்கிறது. அணுசக்தி சோதனையை நிறுத்த சொல்லி ஈரானை கேட்டுக்கொள்ள, வியன்னாவில் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து கச்சா எண்ணெய் விலை சிறிது உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் சொல்கிறார்கள். இன்று காலை வர்த்தகத்தில் நியுயார்க் சந்தையின் முக்கிய பொருளான லைட் ஸ்வீட் குரூட் ஆயில் ( ஆகஸ்ட் டெலிவரிக்கானது ) விலை பேரல் ஒன்றுக்கு 82 சென்ட் உயர்ந்து 129.70 டாலராக இருந்தது. பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை ( செப்டம்பர் டெலிவரிக்கானது ) ஒரு சென்ட் உயர்ந்து 130.20 டாலராக இருந்தது. ஈரானை அணுசக்தி சோதனையை நிறுத்த சொல்லி நடந்து வரும் பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும் இன்னும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்த விஷயத்தில் ஈரான், அமெரிக்காவுடன் ஒத்துப்போனால் அது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஒத்துப்போகவில்லை என்றால் அது மற்ற நாடுகளில் இருந்து தனிமை படுத்தப்படும் என்று எச்சரிக்கைபடுத்தப்பட்டுள்ளது


நன்றி : தினமலர்


1 comment:

கோவை விஜய் said...

கடுப்படிக்கும் கச்ச எண்னெய் விலை கட்டு ப்படுவது எப்போது?

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/