Monday, July 21, 2008

வெளிநாடுகளில் இந்தியர்களின் முதலீடு 53.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது


புதுடில்லி : வெளிநாட்டினர் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வதுபோல இந்தியர்களும் வெளிநாட்டில் இருக்கும் நிறுவனங்களில் அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள். அது வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தோ ( ஜாயின்ட்வெஞ்சர் ) அல்லது வெளிநாட்டு நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை வாங்கிக்கொள்வதன் மூலமாகவோ ( ஹோல்லி - ஓன்ட் சப்சியடரிஸ் ) இந்தியர்களின் முதலீடு இருக்கிறது. இந்த முதலீடு 2007 நிதி ஆண்டை விட 2008 நிதி ஆண்டில் 53.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 2007ல் 15.6 பில்லியன் டாலராக இருந்த இந்தியர்களின் முதலீடு 2008 நிதி ஆண்டில் 23.071 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது. 2007 ல் 1,817 வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த இந்தியர்கள் 2008ல் 2,261 நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள். இது 24.4 சதவீதம் அதிகம். இந்தியர்களில் முதலீட்டில் பெரும்பகுதி சைப்ரஸ், சிங்கப்பூர், நெதர்லாந்து, ஐக்கிய அரபு குடியரசு, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், மொரீசியஸ் போன்ற நாடுகளில் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நாடுகள் தான் வெளிநாட்டினர் எளிதில் முதலீடு செய்யும் வகையில் திட்டங்களை வைத்திருக்கின்றன.


நன்றி : தினமலர்


1 comment:

கோவை விஜய் said...

மகிழ்ச்சியான செய்திதானே!

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/