Thursday, July 31, 2008

வட்டி உயர்வால் பாதிக்கப்படும் இந்திய சிறிய கார் தொழில்


கடந்த செவ்வாய் அன்று, வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தியதை அடுத்து எல்லா வங்கிகளும் கடன்களுக்கான வட்டியை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சிறிய கார் விற்பனையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கார் நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே கார் சந்தை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது. இப்போது வங்கிகள் வட்டியை உயர்த்தி விட்டால் அது மேலும் மோசமாகும். குறிப்பாக சிறிய கார் சந்தை பாதிக்கப்படும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவின் வைஸ் பிரசிடென்ட் ( கார்பரேட் விவகாரம் ) பாலேந்திரன் தெரிவித்தார். இந்தியாவை பொறுத்தவரை சிறிய கார் சந்தையில் தான் நாம் வளர்ச்சியை காண முடியும். வங்கிகள் வட்டியை உயர்த்தி விட்டால் அதிலும் நிச்சயமாக பாதிப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் கம்பெனியான ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் சீனியர் வைஸ் பிரசிடென்ட் ( சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங்) அர்விந்த் சேக்ஸானா இது பற்றி கூறுகையில், வங்கிகள் வட்டியை உயர்த்தினால், கடந்த நிதி ஆண்டில் டபுள் டிஜிட்டில் இருந்த இந்திய ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரி வளர்ச்சி, இந்த நிதி ஆண்டில் சிங்கிள் டிஜிட் ஆகி விடும் என்றார். செவ்வாய் அன்று வங்கிகளுக்கான குறைந்த கால கடனுக்கான ரெபோ ரேட்டை 0.5 சதவீதமும், சி.ஆர்.ஆர்.எனப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தை 0.25 சதவீதமும் உயர்த்தி இருக்கிறது. இதனால் வங்கிகளும் அவர்களிடம் கடன் வாங்குபவர்களுக்கு ( குறிப்பாக கார் லோன் வாங்குபவர்களுக்கு ) வட்டியை ஒரு சதவீதம் வரை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நன்றி : தினமலர்


No comments: