Thursday, July 31, 2008

ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னர் யார் ? ராகேஷ் மோகனா, அலுவாலியாவா

இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்கின் கவர்னராக இருக்கும் ஓய்.வி.ரெட்டியின் ஐந்து வருட பதவிக்காலம் வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் முடிவடைகிறது. அவர் தனது பதவிக்காலத்தின் கடைசி ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கையை கடந்த செவ்வாய் அன்று வெளியிட்டார். ஒரு வேளை அவரது பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்படாவிட்டால் அவருக்கு பதிலாக கவர்னராக வர இருப்பவர் யார் என்ற பேச்சு இப்போதே டில்லியில் அடிபடத்துவங்கி விட்டது. அவருக்கு பதிலாக இப்போது ரிசர்வ் வங்கியின் டெபுடி கவர்னராக இருக்கும் ராகேஷ் மோகன் அல்லது திட்ட கமிஷன் துணை தலைவராக இருக்கும் மான்டேக் சிங் அலுவாலியா வரலாம் என்று பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.ராகேஷ் மோகன் பிரின்ஸ்டன் மற்றும் யேல் பல்கலைக் கழகங்களில் படித்தவர். மத்திய நிதித்துறையில் பணியாற்றிய பின் ரிசர்வ் வங்கிக்கு வந்தவர். எனவே இவருக்கு நிதித்துறை மற்றும் ரிசர்வ் வங்கியில் நிறைய அனுபவம் இருக்கிறது. ஆக்ஸ்போர்டில் படித்த அலுவாலியாவை அடுத்த கவர்னராக நியமித்தால் அதை எதிர்கட்சிகள் விரும்பாது என்கிறார்கள். இவரது நியமனம் பிரச்னைக்குள்ளாகும் என்கிறார்கள். எனவே ஆசியாவில் இரண்டாவதாக மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடான இந்தியாவின் மத்திய வங்கிக்கு யார் தலைவராக வருவார் என்பது இப்போதைக்கு ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

நன்றி : தினமலர்

No comments: