Friday, August 1, 2008

வங்காளதேசத்தில் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் திட்டத்தை கைவிட்டது டாடா


வங்காள தேசத்தில் 3 பில்லியன் டாலர் முதலீட்டில் தொழில் துவங்குவதாக இருந்த திட்டத்தை டாடா நிறுவனம் கைவிட்டு விட்டது. ஃபெர்டிலைசர், ஸ்டீல், பவர் மற்றும் இன்ஃப்ராஸ்டெரச்சர் துறை போன்றவைகரில் 3 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் தொழில் துவங்குவதாக ஏற்கனவே டாடா அறிவித்திருந்தது.அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டும் வங்காள தேச அரசிடம் இருந்து இதற்கான ஒப்புதல் பெறுவதில் சிக்கல் இருப்பதால் இந்த திட்டத்தை டாடா கைவிட்டு விட்டதாக சொல்கிறது. இனிமேலும் அங்கு முதலீடு செய்யும் திட்டம் இல்லை என்று டாடா அறிவித்து விட்டது. 2004ம் ஆண்டிலேயே அங்கு நான்கு பெரிய திட்டங்களை செயல்படுத்த டாடா நிறுவனம், வங்காள தேசத்திடம் விருப்பம் தெரிவித்து திட்டத்தை அறிவித்திருந்தது. ஆனால் 2006ம் வருடம் வரை இது பற்றி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் முக்கிய சில விஷயங்களில் அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காததால் டாடா, அந்த திட்டத்தை கைவிட்டு விட்டது. டாடா நிறுவனம் இது குறித்து கருத்து தெரிவித்தபோது, நாங்கள் அங்கு வேறு துறைகளில் ஈடுபட ஆர்வமாக இருக்கிறோம் என்றனர்.


நன்றி : தினமலர்


2 comments:

கோவை விஜய் said...

டாடாவின் ஒரு லட்ச ரூபாய் காரை பற்றிய பேச்சை காணோம்.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

பாரதி said...

கார் ரெடி யாக உள்ளது ,ஆயுத பூஜைக்கு குழுக்கல் முறையில் தரப்படுகிறது .