Wednesday, July 30, 2008

பி.ஓ.பி., ஆந்திரா வங்கியுடன் இணைந்து மலேஷியாவில் பேங்க் துவங்குகிறது ஐ.ஓ.பி




இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ( ஐ.ஓ.பி., ), பேங்க் ஆப் பரோடா மற்றும் ஆந்திரா வங்கியுடன் இணைந்து மலேஷியாவில் ஒரு வங்கியை துவக்குகிறது. ஐ.ஓ.பி.,யின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர் எஸ்.ஏ.பாத் இதனை தெரிவித்தார். இந்த புதிய வங்கியை மலேஷியாவில் அமைப்பதற்கு 100 மில்லியன் டாலர்கள் ( சுமார் 400 கோடி ரூபாய் ) முதலீடு தெவைப்படுகிறது. இதில் 30 சதவீதத்தை ஐ.ஓ.பி.,கொடுக்கும். மீதி தொகையை மற்ற இரு வங்கிகளும் பகிர்ந்து கொள்ளும் என்றார் அவர். இந்த புது வங்கி, இந்த நிதி ஆண்டின் கடைசியில் அங்கு துவங்கப்படும். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன என்றார் அவர். மேலும் சிட்னியிலும் ( ஆஸ்திரேலியா ) ஹூஸ்டனிலும் ( அமெரிக்கா ) ஐ.ஓ.பி., அதன் கிளையை துவங்க உள்ளது. துபாயில் ஐ.ஓ.பி.,யின் பிரதிநிதி அலுவலகம் ஒன்றும் துவங்கப்பட இருக்கிறது. ஜூன் 30ம் தேதியுடன் முடிந்த இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஐ.ஓ.பி., ரூ.1,48,420 கோடிக்கு வர்த்தகம் செய்திருக்கிறது. இது கடந்த வருடம் முதல் காலாண்டில் செய்ய வர்த்தகத்தை விட 24.9 சதவீதம் அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.








நன்றி : தினமலர்


No comments: