Tuesday, July 29, 2008

பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி : பேங்க் பங்குகள் 8 சதவீதம் வீழ்ந்தது


ரிசர்வ் வங்கி, அதன் நிதிக்கொள்கையின் முதல் காலாண்டு மதிப்பீடு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை 0.5 சதவீதமும், சி ஆர் ஆர் எனப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய கையிருப்பு பண விகிதத்தை 0.25 சதவீதமும் உயர்த்தியதை அடுத்து இன்று பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக வங்கிகளின் பங்குகள் சராசரியாக 8 சதவீதம் சரிந்தன. மாலை 3 மணி அளவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 546.58 புள்ளிகள் குறைந்து 13,802.53 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 140.05 புள்ளிகள் குறைந்து 4,192.05 புள்ளிகளாக இருந்தது. ஐ சி ஐ சி ஐ. 8.19 சதவீதம், ஹெச் டி எஃப் சி. 9.27 சதவீதம், பேங்க் ஆஃப் இந்தியா 12.70 சதவீதம், இந்தியன் பேங்க் 13.80 சதவீதம், ஆக்ஸிஸ் பேங்க் 11.53 சதவீதம் குறைந்திருந்தது.


நன்றி : தினமலர்


No comments: