Tuesday, July 29, 2008

ரெபோ ரேட், சி ஆர் ஆர்., உயர்த்தப்பட்டது : ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை


வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை 0.5 சதவீதம் உயர்த்தி இருக்கிறது ரிசர்வ் வங்கி. அதே போல் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பையும் ( சி ஆர் ஆர் ) 0.25 சதவீதம் உயர்த்தி இருக்கிறது. நிதி கொள்கை குறித்து ரிசர்வ் வங்கி இன்று கூட்டிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரெட்டி தெரிவித்தார். பணவீக்கத்தை குறைக்கவே நாங்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதற்காகத்தான் ரெபோ ரேட் மற்றும் சி ஆர் ஆர் உயர்த்தப்பட்டிருக்கிறது என்றார் ரெட்டி. சி ஆர் ஆர்., ஆகஸ்ட் 30ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. பணவீக்கம் விரைவில் 5 சதவீதத்திற்கு குறைக்கப்படும் என்றும் அவர் சொன்னார். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை காரணமாக மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் சரிந்தன. 14 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே போனது. பொதுவாக வங்கிகளின் பங்குகள் அதிகம் சரிந்து விட்டன. பகல் 12.04க்கு சென்செக்ஸ் 431.11 புள்ளிகள் குறைந்து 13,918.00 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 114.90 புள்ளிகள் குறைந்து 4,217.20 புள்ளிகளாக இருந்தது.

நன்றி : தினமலர்


No comments: