Wednesday, July 30, 2008

சப் - பிரைம் கடன் பிரச்னையிலும் உலக பொருளாதாரம் வளர்ந்துதான் இருக்கிறது : ஐ.நா.அறிக்கை


கடந்த வருடத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட சப் - பிரைம் மார்ட்கேஜ் லோன் பிரச்னையால் பல முன்னேறிய நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் உலக அளவில் 2007 - 08 ல் பொருளாதாரம் வளர்ந்துதான் இருக்கிறது என்கிறது ஐ.நா.,வின் அறிக்கை. உலக அளவில் பொருட்களின் ஏற்றுமதி 14 சதவீதம் உயர்ந்திருக்கிறது. சர்வீஸ் துறையில் 18 சதவீதம் ஏற்றுமதி வளர்ச்சி இருந்திருக்கிறது. இருந்தாலும் உலக மக்கள் தொகையில் பெரும்பகுதியை கொண்டிருக்கும் ஏழை நாடுகள், பணக்கார நாடுகளுடன் பொருளாதாரத்தில் போட்டி போட முடியாமல் திணறிக்கொண்டுதான் இருக்கின்றன. ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டுள்ள யுனைடட் நேஷன்ஸ் கான்பரன்ஸ் ஆன் டிரேட் அண்ட் டெவலப்மென்ட் வெளியிட்ட 2008 க்கான புள்ளிவிபர அறிக்கையில் இந்த விபரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. உலக மக்கள் தொகையில் வெறும் 15 சதவீதத்தை மட்டுமே கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகளும் சேர்ந்தே உலக மொத்த உற்பத்தியில் ( ஜி.டி.பி. ) 70 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன. ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி பொருட்களின் மதிப்பு மற்றும் சர்வீஸ் துறையின் மதிப்பு ஆகியவைதான் ஜி.டி.பி.,யாக கணக்கிடப் படுகிறது. அதுதான் ஒரு நாட்டின் வளத்தை குறிக்கும். உலக அளவில் நடக்கும் ஏற்றுமதியில் பெரும்பகுதி தொழில்வளமிக்க நாடுகளில் இருந்துதான் நடக்கிறது. அங்கிருந்துதான் 60 சதவீதம் பொருட்களும் 70 சதவீதம் சர்வீஸூம் ஏற்றுமதியாகின்றன. முன்னேறும் நாடுகளில் இருந்தும் 2007ல் பொருட்கள் மற்றும் சர்வீஸ் ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது என்று அந்த அறிக்கை சொல்கிறது.


நன்றி : தினமலர்


2 comments:

கோவை விஜய் said...

நல்ல தகவல்.இது தான் பங்கு வர்த்தகத்தை கரடியின் கையிலிருந்து காளையின் கைக்கு...

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

பாரதி said...

ஆமாம் கோவை விஜய்