Wednesday, July 30, 2008

இந்திய, ஆசிய பங்கு சந்தைகளில் மீண்டும் வளர்ச்சி


நேற்றைய பங்கு சந்தையில் சென்செக்ஸ் 557 புள்ளிகள் குறைந்து போன நிலையில், இன்று ஆரம்பம் முதலே உயர்ந்திருக்கிறது. காலை வர்த்தகம் ஆரம்பித்த நிமிடத்திலேயே மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 283 புள்ளிகளும் தேசிய பங்கு சந்தையில் நிப்டி 71 புள்ளிகளும் உயர்ந்தது. பின்னர் அது மேலும் முன்னேறி, பகல் 11.21க்கு சென்செக்ஸ் 327.77 புள்ளிகளும் நிப்டி 76.70 புள்ளிகளும் உயர்ந்திருந்தது. ஆசிய பங்கு சந்தையிலும் இன்று நல்ல வளர்ச்சி காணப்பட்டது. டோக்கியோ பங்கு சந்தையில் நிக்கி 156 புள்ளிகள் உயர்ந்து 13,316 புள்ளிகளாக இருந்தது. ஹாங்காங்கின் ஹேங்செங் 413 புள்ளிகள் உயர்ந்து 22,671 புள்ளிகளாக இருந்தது. தைவானின் வெயிட்டட் இன்டக்ஸ் 79 புள்ளிகள் உயர்ந்து 7,093 புள்ளிகளாக இருந்தது. சிங்கப்பூரின் ஸ்டெரிட்ஸ் டைம்ஸ் இன்டக்ஸ் 33 புள்ளிகள் உயர்ந்து 2,919 புள்ளிகளாக இருந்தது. சியோலின் காம்போசைட் இன்டக்ஸ் 14 புள்ளிகள் உயர்ந்து 1,581 புள்ளிகளாக இருந்தது. ஷாங்கை காம்போசைட் இன்டக்ஸ் 10 புள்ளிகள் உயர்ந்து 2,860 புள்ளிகளாக இருந்தது.
நன்றி : தினமலர்


No comments: