Saturday, December 5, 2009

வெள்​ளிப் பனி​மலை உரு​குதே

""வெள்​ளிப் பனி​மலை மீது​லா​வு​வோம்'' என்று பாடிய பாரதி,​ கூடவே "GL​A​C​I​E​RS' ​ ​என்ற ஆங்​கி​லச் சொல்​லுக்கு ஓர் அழ​கிய தமிழ்ச்​சொல்லை ""வெள்​ளிப்​பனி'' என்று பாடிக்​காட்​டிய தேசி​யக்​க​விக்கு வணக்​கம் செலுத்​தும் அதே​ச​ம​யத்​தில்,​ 2035-ல்,​ அதா​வது இன்​னும் 25 ஆண்​டு​க​ளில்,​ கால​நி​லை​யின் தடு​மாற்​றம் விளை​வாக,​ இம​ய​மலை திரு​வண்​ணா​ம​லை​போல் ஆகி​வி​டும் என்று சில கால​நிலை வல்​லு​நர்​கள் எச்​ச​ரித்​துள்​ளதை எண்​ணிப் பார்த்​தால்,​ நெஞ்சு பொறுக்​கு​தி​லையே.

"மன்​னும் இம​ய​மலை எங்​கள் மலையே' என்று இப்​போது நாம் பாடி​னால் பாகிஸ்​தான்,​ நேபா​ளம்,​ திபெத்,​ பூடான் ஆகிய நாடு​கள் எங்​கள் பங்கு எங்கே என்று கேட்​கும்?​ இம​ய​ம​லை​யின் பரந்த விஸ்​தீ​ர​ணம் மத்​திய ஆசி​யா​வி​லும் விரிந்து பரந்​துள்​ளது. ஆனால் வெள்​ளிப்​ப​னி​ம​லை​கள் மட்​டும் மேற்​கூ​றிய நான்கு நாடு​க​ளு​டன் இந்​தி​யா​வுக்​கும் சேர்ந்து சொந்​தம். கால​நி​லைத் தடு​மாற்​றத்​தால் வேக​மாக வெள்​ளிப்​பனி உரு​கும் சூழ்​நி​லையை மன​தில் கொள்​ளா​மல் சொந்​தம் கொண்​டா​டும் ஐந்து நாடு​க​ளும் இந்த வெள்​ளிப்​பனி மலையை ஒரு மாபெ​ரும் பவர்​ஹ​வு​ஸôக மாற்ற எண்​ணு​கின்​றன.

÷உ​யிர்ச்​சூ​ழல் வளத்​தைப் புறக்​க​ணித்​து​விட்டு தென்​கோ​டி​யில் செயல்​பட்ட சேது சமுத்​தி​ரத் திட்​டம் ஓசை இழந்​து​விட்​டது. இது சூழல் பாது​காப்பு கார​ண​மாக இல்லை. கால்​வா​யில் மண் அள்ள அள்ள மீண்​டும் தூர்ந்து வரு​கி​ற​தாம். ட்ரட்​ஜர் கார்ப்​ப​ரே​ஷ​னுக்கு வர​வேண்​டிய பணம் வர​வில்​லை​யாம். சேது​ரா​மர் சேஃ​பா​கி​விட்​டார். இப்​போது லிப​ரான் கமி​ஷன் அறிக்​கை​யில் அயோத்​தி​ரா​மர் பிரச்​னை​யா​கி​விட்​டார். ராமர் பிரச்னை நமக்கு ஏன்?​ இப்​போ​துள்ள பூதா​கா​ர​மான பிரச்னை வட​கோ​டி​யில் உள்ள இம​யத்​தின் பனி​ம​லை​கள். ராம​ருக்கு வந்த ஆபத்து இப்​போது சிவ​னுக்கு இடம்​

பெ​யர்ந்​து​விட்​டது. மேரு​ம​லைக்​கும் கைலா​சத்​துக்​கும் ஆபத்து காத்​தி​ருக்​கி​றது. கால​நி​லைத் தடு​மாற்​றத்​துக்கு உல​கி​லேயே முதல் பலி இம​யத்​தின் வெள்​ளிப்​ப​னி​ம​லை​கள் என்று I.C.I.M.O.D.. கரு​து​கி​றது. அதா​வது In​t​e​r​n​a​t​i​o​n​al Ce​n​t​re ​ For In​t​e​g​r​a​t​ed Mo​u​n​t​a​in De​v​e​l​o​p​m​e​nt-​ல் கால​நி​லைத் தடு​மாற்​றத்தை ஆரா​யும் விஞ்​ஞா​னி​க​ளின் அறிக்​கை​யின் அடிப்​ப​டை​யில், ​I.C.I.M.O.D.,​ இம​ய​ம​லைப் பகு​தி​க​ளில் 2100-ஐ நெருங்​கும்​போது வெப்​ப​நிலை 5.5 டிகிரி செல்​சி​யஸ் அதி​க​மா​கும் என்​ப​தால்,​ பனி​ம​லை​கள் அழி​யும் என்று கூறு​கி​றது. ஆகவே,​ கயி​லை​மலை திரு​வண்​ணா​ம​லை​யா​கி​விட்​டால்.... இம​ய​ம​லை​யில் உற்​பத்​தி​யா​கும் நதி​களை நம்பி வாழும் இந்​தி​யர்​கள்,​ பாகிஸ்​தா​னி​யர்​கள்,​ பர்​மி​யர்​கள்,​ நேபா​ளி​கள்,​ பூட்​டா​னி​கள்,​ சீனர்​கள் எத்​தனை கோடி,​ எத்​தனை கோடி,​ இறைவா இவர்​கள் கதி என்​ன​வா​கும்?​ நினைத்​துப் பார்க்​கவே குலை​ந​டுங்​கும் ஒரு சூழ்​நி​லை​யில் எத்​தனை கோடி எத்​தனை கோடி டாலர்​கள் செல​வ​ழித்து நிலை​யற்ற நீர் மின்​சா​ரத்​திட்​டங்​களை இந்​தியா மட்​டு​மல்ல;​ பாகிஸ்​தான்,​ பூடான் நிறை​வேற்ற முனைந்​து​விட்​டது. இந்​தி​யா​வில் தைபாங் திட்ட மதிப்​பீடு,​ பூடா​னின் தலா திட்​டம்,​ பாகிஸ்​தா​னில் டையா​மர் பாஷா திட்​டம் ஆகிய மூன்​றும் உல​கி​லேயே அதி​கச் செல​வுள்ள நீர்​மின்​சா​ரத் திட்​டம் என்று கூறப்​ப​டு​கி​றது. ஒட்​டு​மொத்​த​மாக 1,50,000 மெகா​வாட் மின் உற்​பத்​தித் திட்​டம்.

÷இந்​தத் திட்​டங்​க​ளுக்கு இந்​தி​யா​வில் மட்​டு​மல்ல;​ சீனா​வி​லும் எதிர்ப்​புக் கிளம்​பி​யுள்​ளது. சீன நிபு​ணர் குழு மூத்த பொறி​யா​ளர் சின்-​யுவான் ஹாங்,​ பனி​மலை-​உரு​கு​வது தீவி​ர​மா​கும் என்​ப​தால் ஜீவ​ந​தி​கள் பாலா​றா​கி​விட்​டால் ​(வறண்​டு​விட்​டால்)​ இல்​லாத நீரில் எப்​படி மின்​சா​ரம் எடுக்க முடி​யும்?​ என்​கி​றார். ""கான்​கி​ரீட் மலை​கள்:​ இம​ய​ம​லை​க​ளின் அணைக் கட்​ட​டங்​கள்'' என்று ​I.C.I.M.O.D.,​ சார்​பில் ஆய்வு நிகழ்த்​திய ஸ்ரீபத் தர்​மா​தி​காரி என்ற பொறி​யா​ளர்,​ ""செய​லாற்ற முடி​யாத இம் மாபெ​ரும் திட்​டங்​க​ளில் கோடி கோடி​யா​கப் பணம் செல​வ​ழிப்​பது முட்​டாள்​த​ன​மா​னது. அது​வும் உல​க​ளா​விய நிதி நெருக்​க​டி​யுள்ள சூழ்​நி​லை​யில் இச்​செ​லவு அடி​முட்​டாள்​த​னம்'' என்று குறிப்​பிட்​டுள்​ளார். ""கால​நி​லைத் தடு​மாற்​றத்தை மன​தில் வைக்​கா​மல் இம​ய​ம​லை​யில் உற்​பத்​தி​யா​கும் நதி​க​ளின் போக்கு நிலை​யா​னது என்ற கரு​து​கோ​ளில் செயல்​ப​டு​வது ஆபத்​தா​னது. பனி ஏரி​கள் வெடித்து உடைப்பு எடுத்​தால் தோன்​றக்​கூ​டிய பயங்​கர வெள்​ளம் அணைக்​கட்​டு​களை உடைத்​து​வி​டும். காலப்​போக்​கில் நதி​யில் நீரோட்​டம் இல்​லா​விட்​டா​லும் மின் உற்​பத்தி செய்ய முடி​யாது...'' என்று தர்​மா​தி​காரி கூறி​யுள்​ளார்.

""பனி ஏரி வெடிப்பு'' என்​பது எதுவோ தரைப்​ப​கு​தி​யில் உள்ள சாதா​ரண ஏரி உடை​வ​து​போல் அல்ல. ஆங்​கி​லத்​தில் Gl​a​c​i​al La​ke Ou​t​b​u​r​st Fl​o​o​ds -​ GL​OF என்​பார்​கள். 1985-ல் நேபா​ளத்​தில் ஒருக்ளா​ஃப் ஏற்​பட்​ட​தன் விளை​வால் மலைப்​ப​கு​தி​யில் 14 பாலங்​க​ளை​யும்,​ 1 நீர்​மின் திட்ட அணை​யை​யும் உடைத்​துப் பெரு​கிய வெள்​ளத்​தில் மக்​கள் மடிந்​த​னர். பள்​ளத்​தாக்​குப் பயிர்​கள் வெள்​ளத்​தில் மூழ்கி நாச​மா​யின. பூடான் பகு​தி​யில் மட்​டும் 2,600 பனி ஏரி​கள் உள்​ளன. இவற்​றில் 25 வெடிக்​கும் அபா​யத்​தில் உள்​ளது. இதே நிலை இந்​தி​யா​வி​லும் உண்டு. வெள்​ளிப்​பனி உருகி ஆங்​காங்கே பனிக்​கட்டி ஏரி​கள் உரு​வாகி அவை வெடிக்​கின்​ற​ன​வாம்.

÷வ​ளர்ச்சி வளர்ச்சி என்று பேசி எவ்​வாறு பொது மூல​த​னத்​தைக் கொள்​ளை​ய​டிக்​க​லாம் என்​ப​தில் தீவிர கவ​னம் செலுத்​தப்​ப​டு​கி​றது. இந்த நோய் இந்​தியா,​ பாகிஸ்​தான்,​ பூடான்,​ நேபா​ளம் ஆகிய நாடு​க​ளில் பரவி இம​யத்​தையே அசைத்​துப் பார்க்​கி​றது. இப்​போ​துள்ள பிரச்னை,​ வெள்​ளிப்​ப​னி​மலை உரு​கு​வ​தால் தோன்​றக்​கூ​டிய தண்​ணீர்ப்​பஞ்​சம். கால​நி​லைத் தடு​மாற்றத்தை மனத்​தில் கொண்டு எதிர்​கால நீர்த்​தே​வையை எப்​ப​டிச் சமா​ளிப்​பது என்று யோசிப்​பதை மறந்து கோடி கோடி​யா​கப் பணத்​தைக் கொட்டி வற்​றப்​போ​கும் நதி​கள் மீது நீர்​மின்​சா​ரத் திட்​டங்​க​ளைச் செயல்​ப​டுத்​து​வது புத்​தி​சா​லித்​த​ன​மான ஆட்சி அதி​கா​ரத்​தின் லட்​ச​ணம் ஆகாது.

÷அ​னைத்​து​லக நிலை இப்​படி உள்​ள​போது,​ இந்த அவ​ச​ர​கா​லப் பிரச்​னையை இந்​தியா எவ்​வாறு மதிப்​பீடு செய்​கி​றது?​ மத்​திய அர​சின் வனம் மற்​றும் சுற்​றுச்​சூ​ழல் அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ்,​ வெள்​ளிப்​பனி உரு​கு​வது பற்​றிய விஷ​யத்​திற்​கும் கால​நி​லைத் தடு​மாற்​றத்​திற்​கும் உறவு இருப்​ப​தா​கச் சொல்​லப்​ப​டும் விஷ​யம் ஆதா​ர​மில்​லா​தது என்று கூறு​கி​றார். மதிப்​பிற்​கு​ரிய அமைச்​சர் எந்த அடிப்​ப​டை​யில் கூறு​கி​றார் என்​றால்,​ அரசு கூறு​வ​தற்​கெல்​லாம் தலை​யாட்​டி​ய​படி உண்​மையை ஒளித்து எழு​து​வ​தற்​கும் சில விஞ்​ஞா​னி​கள் கிடைத்​த​வண்​ணம் உள்​ள​னர். அப்​ப​டிக்​கி​டைத்த வி.கே. ரெய்னா ஓய்வு பெற்ற புவி​யி​யல் விஞ்​ஞானி. ""வெள்​ளிப்​பனி மெல்ல மெல்​லப் பின்​னோக்​கிச் செல்​வது -​ உருகி ஏரி​யா​வது 19-ம் நூற்​றாண்​டின் இறு​திப் பகு​தி​யி​லேயே தொடங்​கி​விட்​டது என்​றும்,​ அலாஸ்கா அல்​லது கிரீன்​லேண்​டு​டன் ஒப்​பி​டும்​போது பின்​னோக்​கிச் செல்​லும் வெள்​ளிப்​பனி அவ்​வ​ளவு அதி​க​மா​யில்​லை​யாம். வெள்​ளிப்​பனி இயக்​கம் விழும் வெள்​ளிப்​பனி அள​வு​கொண்​டும்,​ தட்​ப​வெப்​பம் கொண்​டும் நிர்​ண​ய​மா​கி​ற​தே​த​விர தட்​ப​வெப்​பத் தடு​மாற்​றத்​துக்​கும் வெள்​ளிப்​பனி மறை​வுக்​கும் தொடர்பு இல்லை என்​றும் கங்கை உற்​பத்​திக்​குக் கார​ண​மான கங்​கோத்ரி வெள்​ளிப்​பனி நின்ற நிலை​யில் உள்​ள​தா​க​வும் ரெய்னா கூறி​யுள்​ளதை அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ் ஏற்​றுக்​கொண்​டுள்​ளார்.

÷இந்​தியா-​பாகிஸ்​தான் ஜீவ​நதி சிந்​து​வு​டன் ஐந்து கிளை நதி​க​ளு​டன்,​ இந்​தி​யா​வுக்கே சொந்​த​மான கங்கை-​பிரம்​ம​புத்​திரா நதி​க​ளுக்​கும் சேர்த்து ஒரு பிரச்​னை​யும் இல்​லை​யென்று ஒரு ஜால்ரா விஞ்​ஞானி கூறி​யுள்​ளதை அப்​ப​டியே I.P.C.C. என்று சொல்​லப்​ப​டும் In​t​er Go​v​e​r​n​m​e​n​t​al Pa​n​el On Cl​i​m​a​te Ch​a​n​ge-​ன் தலை​வ​ரான ராஜேந்​திர பாச்​செ​ளரி தனது எதிர்ப்பை ""கார்​டி​யன்'' பத்​தி​ரி​கை​யில் குறிப்​பி​டும்​போது,​ "இப்​படி ஓர் அர்த்​த​மில்​லாத ரெய்​னா​வின் அறிக்​கையை அமைச்​சர் ஜெய்​ராம் ரமேஷ் ஒப்​புக்​கொண்​டது எப்​படி?​' என்று வியந்​துள்​ளார். I.P.C.C. ​ என்​பது நோபல் பரிசு பெற்ற விஞ்​ஞா​னி​களை உள்​ள​டக்​கி​யது. அமைச்​ச​ரின் கூற்​றில் உள்ள கருத்து வேற்​றுமை இத்​து​டன் அடங்​க​வில்லை. TE​RI ​ என்று சொல்​லப்​ப​டும் The Energy and Resour​ces Institute-​ன் வெள்​ளிப்​பனி விஞ்​ஞானி சையத் இக்​பால் ஹசன்,​ வனம்-​சுற்​றுச்​சூ​ழல் அமைச்​ச​ர​கம் தன்​னி​டம் தட்​ப​வெப்​பத் தடு​மாற்​றத்​தி​னால் இம​யத்​தின் வெள்​ளிப்​பனி மலை​யின் பாது​காப்பு பற்​றிய அறி​வி​யல் அறிக்கை கேட்​கப்​பட்​ட​தா​க​வும்,​ தனது கருத்​து​கள் புறக்​க​ணிக்​கப்​பட்​ட​தா​க​வும் கூறு​கி​றார்.

ரெய்னா அறிக்​கைக்​குத் தக்க பதில் வழங்​கி​யுள்​ளார். ""1980-களி​லேயே பசு​மை​யக நச்சு ஆவி​கள் இமய வெள்​ளிப்​ப​னி​க​ளைத் தாக்க ஆரம்​பித்​து​விட்​டன என்​றும்,​ இத​னால் இம​யத்​தின் வெள்​ளிப்​பனி வேக​மாக உரு​கு​வ​தை​யும் கண்​ட​றிந்​துள்​ள​தா​க​வும்,​ நேபா​ளம்,​ சிக்​கிம்,​ பூடான் பகு​தி​க​ளில் வெடிக்​கக்​கூ​டிய பனிக்​கட்டி ஏரி​கள் வெள்​ளிப்​பனி உரு​கு​வ​தால் தோன்​றி​யுள்​ளன என்​றும் குறிப்​பிட்​டுள்​ளார். எனி​னும் பூடான் அரசு அத்​த​கைய வெடிக்​கும் ஏரி​க​ளைக் கண்​ட​றிந்து அதை ஆபத்​தில்​லா​மல் நீரை வெளி​யேற்ற முயற்சி செய்​கி​றது. உத்​த​ராஞ்ச​லில் உள்ள கார்​வால் பல்​க​லைக்​க​ழ​கத்​தின் புவி​யி​யல் விஞ்​ஞா​னி​க​ளின் ஆய்​வுப்​படி,​ "கடந்த 200 ஆண்​டு​க​ளில் கங்​கோத்​ரி​யின் வெள்​ளிப்​பனி 2 கிலோ​மீட்​டர் அள​வுக்​குப் பின்​னோக்​கி​விட்​டது. அதா​வது உரு​கிக்குறைந்​து​விட்​டது.

ஆனால் கடந்த 25 ஆண்​டு​க​ளில் மட்​டும் 800 மீட்​டர் உள்​ள​டங்​கி​விட்​டது'' இந்த உண்மை நிலையை மூடி மறைத்து கங்​கோத்ரி வெள்​ளிப்​பனி உள்ள இடத்​தில் மாறா​மல் இருப்​ப​தாக அமைச்​சர் கூறு​வது நகைப்​புக்கு இடம் அளித்​தா​லும்,​ வெள்​ளிப்​பனி இழப்​பால் ஏற்​ப​டும் வெடி ஏரி​கள் அல்​கொய்தா தீவி​ர​வா​தி​க​ளின் வெடி​குண்​டை​விட மோச​மான விளை​வு​களை ஏற்​ப​டுத்​தக்​கூ​டிய செய்தி நகைப்​புக்​கு​ரி​யது இல்லை.
கட்டுரையாளர் : ஆர்.எஸ். நாரா​ய​ணன்
நன்றி : தினமணி

No comments: