Saturday, November 21, 2009

தங்கம் விலை ஏற்றம் எதிரொலி பழைய தங்கம் விற்பனையும் குறைவு

தங்கத்தின் பயங்கர விலையேற்றத்தால், பழைய தங்க நகைகள் விற்பனை குறைந்துள்ளதாக மும்பையை சேர்ந்த தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.மகாராஷ்டிரா, மும்பையில், சவேரி பஜாரில், தங்கம் வாங்குவது மற்றும் விற்பது ஆகிய இரண்டும் நடைபெறும். ஆனால், கடந்த புதனன்று ஏற்பட்ட, தங்கத்தின் பயங்கர விலையேற்றத்தால், இந்த பஜார் பகுதி தற்போது வெறிச்சோடி காணப்பட்டது.இதுகுறித்து, ஜுக்ராஜ் காந்திலால் அண்ட் கோ என்ற நிறுவனத்தை சேர்ந்த பிரகாஷ் ஜே.ஜெயின் என்பவர் கூறியதாவது:தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி 200 டன் அளவிலான தங்கத்தை ஐ.எம்.எப்.,யிடம் இருந்து வாங்கி உள்ளது.பத்து கிராம் தங்கத்தின் விலை 15 ஆயிரம் ரூபாயாக இருந்த போது, தினமும், 8 கிலோ முதல் 10 கிலோ வரை தங்கம் விற்பனைக்கு வந்தது. அதுவே 10 கிராம் தங்கம் 16 ஆயிரம் ரூபாயாக அதிகரித்த போது, எங்களிடம் தினசரி விற்பனைக்காக வரும் தங்கத்தின் அளவு 4 கிலோ முதல் 5 கிலோவாகக் குறைந்தது. 10 கிராம் தங்கம் 17,150 ரூபாயை தொட்டபோது, எங்களிடம் விற்பனைக்கு வரும் தங்கத்தின் அளவு தினமும் 4 கிலோவாகக் குறைந்தது.விலை அதிகரிக்கும் போது, மக்கள் பழைய நகைகள் விற்பனை செய்வது குறைந்து கொண்டே வந்துள்ளது. தற்போதைய நிலையிலேயே தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே போனால், அடுத்த ஆறு மாதங்களில், 10 கிராம் தங்கத்தின் விலை 18 ஆயிரத்தை தொடும் என கருதுகிறேன். நான் எதிர்பார்த்த காலத்தை விட குறைந்த காலத்திலேயே, தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.இவ்வாறு ஜே.ஜெயின் கூறினார்.மும்பையில் மிகப்பெரிய நகைகடையான திரிபுவன் தாஸ் பீம்ஜி சவேரி மேலாளர் கிரண் தீக்ஷித் கூறுகையில், 'மக்கள், திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குகி
நன்றி : தினமலர்


1 comment:

Atchuthan Srirangan said...

பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா

http://pangusanthai-srilanka.blogspot.com/

பங்குச்சந்தை பற்றிய பொதுவான தகவல்களும் பங்கு முதலீட்டின் நுணுக்கங்களையும் எளிய முறையில் கற்றுக்கொள்வதக்கான பதிவு,முற்றிலும் தமிழில் கற்று கொள்ளுங்கள் வெற்றி பெறுங்கள்