Friday, November 27, 2009

துபாய் பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது: ஆனந்த் சர்மா

துபாய் பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது என்று மத்திய தொழில் வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். துபாய் அரசு நிறுவனமான துபாய் வோல்ட், 59 பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்துவதற்கு ஆறு மாத காலம் தவணை கேட்டுள்ளது. இது நேற்று பங்குச் சந்தை, கடன் சந்தை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இன்று துபாய் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது. துபாய் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு, இந்திய பங்குச்சந்தையில் எதிரெலித்து கடும் சரிவினை கண்டது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள மத்திய தொழில் வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, துபாய் பொருளாதார நெருக்கடியால், இந்தியாவின் பொருளாதாரத்திற்கோ, ரியல் எஸ்டேட் தொழிலுகோ எந்த வித பாதிப்பும் வராது என்று கூறியுள்ளார். மேலும் , இந்திய பொருளாதாரம் பரந்த அளவிலானது. துபாயில் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், இங்கும் பாதிப்பு ஏற்படும் என்று நினைக்கவில்லை. அதே நேரத்தில் இந்திய ரியல் எஸ்டேட் துறை நன்கு செயல்பட்டுக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று நினைக்கவில்லை என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


No comments: