Friday, November 27, 2009

இந்திய ஐ.டி., துறையில் அதிகரிக்கிறது வேலைவாய்ப்பு

இந்தியாவில் ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. உலக அளவில் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து அனைத்து நாடுகளும் மீண்டு வருகின்றன. அனைத்து நாடுகளிலும் இயல்புநிலை ஏற்படத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி) நிறுவனங்களுக்கு உள்நாட்டிலும் வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது. இதனையடுத்து, இவ்வாண்டில், இத்துறையில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று நாட்டின் சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குனர் (மனிதவள மேம்பாடு) மோகன்தாஸ் பை தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறும் போது, ஐ.டி., துறையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 3 லட்சம் வேலைவாய்ப்புகள் இருந்தன. 2007-ம் ஆண்டு 3 லட்சத்துக்கும் அதிகமான வாய்ப்புகள் இருந்தன. கடந்த 18 மாதங்களில்தான் நிலைமை இத்தனை மோசம். இப்போது மீண்டும் மறு எழுச்சிக்கான காலம். அடுத்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே நல்ல மாறுதல்களைக் காணலாம் என்று தெரிவித்தார். மேலும் 20000 புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் முயற்சியில் தங்கள் நிறுவனம் இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


No comments: