Friday, November 27, 2009

தகிக்கிறது தங்கம் : சவரன் ரூ.13,464

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 13,464 ரூபாயை எட்டியது. தங்கத்தின் விலை நேற்று மாலை சற்று குறைந்து 13,368 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கத்தின் விலை எப்போதுமில்லாத வகையில் தற்போது 13 ஆயிரத்தையும் தாண்டி விற்பனையாகி வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் 1,655 ரூபாயாகவும், ஒரு சவரன் 13,240 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று தங்கத்தின் விலை மேலும் அதிகரித்தது.
ஒரு கிராம் 1,675 ரூபாயாகி, ஒரு சவரன் 13,400 ரூபாயை எட்டிப்பிடித்தது. மாலை கிராமுக்கு நான்கு ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் 1,671, சவரன் 13,368 ரூயாய்க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 1683 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 13 ஆயிரத்து 464 ரூபாயாகவும், 24 காரட் தங்கத்தின் விலை 18 ஆயிரத்து 100 ரூபாயாகவும் உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை(சில்லரை) 31.80 ரூபாயாக உள்ளது. பார் வெள்ளியின் விலை 29 ஆயிரத்து 715 ரூபாயாக உள்ளது. தங்கத்தின் விலை நாளுக்குள் நாள் உயர்ந்து கொண்டே செல்வதால், சில நாட்களில் சவரன் 14 ஆயிரம் ரூபாயை எட்டிப்பிடிக்கும் என தெரிகிறது.
நன்றி : தினமலர்


No comments: