Monday, November 23, 2009

டாலருக்கு நிகர் வேறு ஏதுமில்லை: மன்மோகன்

உலக வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான நாணயம் வேறு ஏதுவும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது, அமெரிக்க தொழில் நிறுவனங்கள், தொழில் தொடங்குவதில் ஊக்கத்துடன் செயல்படுவதை பாராட்டினார். தற்சமயம் டாலருக்கு மாற்றாக வேறு அந்நிய செலவாணியை நினைக்க வில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சீனாவிடம் அந்நிய செலவாணி கையிருப்பாக 2.5 டிரில்லியன் டாலர் உள்ளது. இதில் சிறு அளவு கூட விற்பனை செய்யவில்லை. இதில் இருந்து டாலரின் மேல் உள்ள நம்பிக்கையை அறியலாம். டாலரின் மீதான நம்பிக்கையில் பிரச்னை உள்ளது. இவை விரைவில் தீரும் என்று தெரிவித்தார். அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி பற்றி கேட்டபோது, அமெரிக்க முறையில் இது தற்காலிக பின்னடைவு, தற்காலிகமான கேள்விக்குறியே, ஆனால் இந்த நெருக்கடிக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என்று மன்மோகன் சிங் கூறினார்.
நன்றி : தினமலர்

No comments: