Wednesday, October 14, 2009

ஒரு வருடம் இல்லாத அளவு ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு

ஒரு வருடம் இல்லாத அளவு ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சரிக்கட்டும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் காரணமாக டாலரின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இன்றும், மும்பை வங்கிகளுக்கு இடையிலான டாலரின் மதிப்பு குறைந்து, ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 பைசா குறைந்து 46.18 ரூபாயாக உள்ளது. கடந்த 12ம் தேதி அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 8 பைசா குறைந்து 46.48/49 இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதிக்கு பிறகு ரூபாயின் மதிப்பு இதுபோல குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதியாளர்கள் டாலர் விற்பனையை அதிகரித்து இருப்பதே டாலரின் மதிப்பு குறைவிற்கு காரணம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நன்றி : தினமலர்


No comments: