Thursday, October 22, 2009

6500 பேர் நீக்கம்: மகிந்திரா சத்யம் திடீர் அறிவிப்பு

6500 பேரை திடீரென நீக்கியுள்ளது மகிந்திரா சத்யம் நிறுவனம். சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு செய்த மோசடி காரணமாக தவித்து வந்த அந்நிறுவன ஊழியர்கள், சத்யம் நிறுவனத்தை மகிந்திரா நிறுவனம் நடத்த இருப்பதாக வந்த செய்தியை கேட்டு சந்தோஷம் அடைந்தனர். ஆனால், சத்யம் நிறுவனம் மகிந்திரா நிறுவனத்திற்கு கைமாறிய சில தினங்களில் 8 ஆயிரம் பேரை கட்டாய விடுப்பில் அனுப்பியது மகிந்திரா நிறுவனம். அதன் பின் 1500 பேரை மட்டும் மீண்டும் அழைந்து கொண்ட நிர்வாகம், தற்போது மீதாமுள்ள 6500 பேருக்கு இமெயிலில் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாகவும், அவர்களின் கணக்குகளை முடிந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப் பட்டு இருந்தது. இதுகுறித்த அந்நிறுவனம் தெரிவிக்கும் போது, ஊழியர்களை தற்காலிகமாகவே வேலையில் இருந்து நீக்கி உள்ளோம் என்று கூறியுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: