Friday, September 4, 2009

ஐரோப்பாவில் குண்டு பல்பிற்கு தடை

ஐரோப்பிய நாடுகளில் குண்டு பல்பு பயன்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப் பட்ட இந்த குண்டு பல்புகளால், மின்சாரம் அதிகம் வீணாவதோடு, அதனை பயன்படுத்துவதன் மூலம் வெப்பமும் அதிகரிக்கிறது. இதனை தடுக்கும் விதமாக, ஐரோப்பாவில் குண்டு பல்பிற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும், குண்டு பல்பிற்கு பதிலாக ப்ளோரோசன்ட் லேம்ப்ஸ் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஏற்கனவே, ஆஸ்திரேலியாவிலும் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
நன்றி : தினமலர்


No comments: