Friday, September 4, 2009

6 வாரங்களுக்குள் 2.5 பில்லியன் டாலர் ஆடர் பெறுவோம்: பெல் நிறுவனம்

இந்தியாவின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடேட்(பெல்) வெளியிட்டுள்ள செய்தியில், வரும் 4 முதல் 6 வாரங்களுக்குள் 2.5 பில்லியன் டாலர் மதிப்புடைய ஆடர்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவன சேர்மன் தெரிவிக்கும் போது, அதிக ஆடர்களை பெற பெல் நிறுவனம் போதுமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஏற்கனவே பல்வேறு திட்டங்களை வகுத்து விட்டோம். தற்போது முதல் காலாண்டு நிதியறிக்கை முடிவிற்காக காத்துக்கொண்டு இருக்கிறோம். இந்த வருடம் 150 பில்லியன் ரூபாய் உட்பட 1.3 டிரிலியன் ரூபாய் அளவிற்கான ஆடர்களில் கையெழுத்திடப் பட்டுள்ளது. இன்னும் 4 முதல் 6 வாரங்களில் 2.5 பில்லியன் டாலர் வரையிலான ஆடர்களை பெறுவோம் என தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


No comments: