Friday, September 4, 2009

கோடிகளை குவிக்கும் கோவில் பிசினஸ்: ஒரு ஷாக் ரிபோர்ட்

மனிதனுக்கு வேலை, பணம் உள்ளிட்ட எந்த பிரச்னைகள் ஏற்பட்டாலும், தன்னுடைய கவலைகளை தீர்த்து கொள்வதற்காக, அவன் மு‌தலில் தேடி செல்லும் இடம் கோவில். ஆத்மாவிற்கு அமைதியும் , நிம்மதியையும் தரும் இந்த கோவில்களில் தற்போதை‌ய நிலை, பணத்தை குவிக்கும் பிசினசாகி போனது தான். உடனடியாக கோடீஸ்வரராக நினைக்கும் சிலர், தங்கள் இடத்தில் ஒரு கோவிலை கட்டி, அங்கு ஒரு உண்டியலை வைத்து விடுகின்றனர். பின்னர், அந்த கோயிலை பிரபலப் படுத்தி, அதன் மூலம் கோடி கணக்கில் லாபம் பெறுகின்றனர். இதனால் தற்போது, தமிழகம் முழுவதும் கோயில் பிசினஸ் தான் கொடி கட்டி பறக்கிறது. இந்த கோயில்கள் அனைத்தும் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப் பட்டால் மட்டுமே மக்கள் ஏமாற்றப் படாமல் இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல், மக்களின் பணமும் சரியான தேவைகளுக்காக பயன்படுத்தப் படும். ஆனால் இதுபோன்ற தனியார் கோயில்களில் கிடைக்கும் பணம் குறிப்பிட்ட ஒருசிலருக்கு மட்டுமே போகின்றன. இதுகுறித்து, திருப்பூர் ஈஸ்வரன்கோயில், பெருமாள் கோயில் முன்னாள் திருப்பணிக்குழுத் தலைவர் முருகநாதன் தெரிவிக்கும் போது, ஒரு தனியார் கோயிலை அறநிலையத்துறை எடுப்பதால் அதை அரசு எடுத்ததாக ஆகிவிடாது. அங்கு வரும் காணிக்கை, நன்கொடை போன்றவை கணக்குப் பார்த்து தணிக்கை செய்து அது வேறொரு வேலைக்கு பயன்பட்டுவிடாமல் அறநிலைத் துறை பார்த்து கொள்கிறது. அதோடு அந்த கோயிலுக்கான பூஜை நேம நியமங்களை அறங்காவலர் குழு என்ற தனியார் தான் நிர்வகிப்பார்கள். ஒரு கோயிலை அறநிலையத்துறை நிர்வகிப்பது தான் உண்மையில் அந்தக் கோயில் நிர்வாகிகளுக்குப் பாதுகாப்பானது என்று தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார். மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் உட்பட ஏகப் பட்ட தனியார் கோயில்கள் தமிழகத்தில் தற்போது வளர்ந்து இருப்பது குறிப்பிடத் தக்கது.
நன்றி : தினமலர்


2 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

பாரதி said...

thanks ulavu.com